உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருத்தோவியம்

171

பொழிந்த செல்வியார் யார்? சீரைக்கொண்ட காரைக்காற் பாவையாரல்லரோ! இங்ஙனமே, பிறைச்சடைப் பெருமான் பேரருள் மாந்திய அருகாச் சிறப்பிற் பரவையாருங் கொங்கலர் கூந்தற் சங்கிலியாரும் மகிழ்க் கீழிருந்த மாதொரு கூறனை மற்றவனருளால் தெற்றென வுணர்ந்துங், காதலர்பொருட்டுத் தூதனாய்க் கொண்டும், எத்திறத்தார்க்கும் எங்குங்கிட்டா மெய்த்தவமுடைய மெல்லியலாராகலின் அவரினுஞ் சிறந்த அடியாரும் அவரினுஞ் சிறந்த நல்லாருஞ் சுந்தரமூர்த்திகட்கு வேறுளர் கொல்லோ? இவ்வாறு நாச்சியாரிரு வருஞ் சிவபிரான் திருவடிக்கட் பெருகிய பேரன்புடையராதல் தேற்றுதற்கன்றோ, சுந்தரமூர்த்தி நாயனார்,

“பண்மயத்த மொழிப்பரவை சங்கிலிக்கும் எனக்கும் பற்றாய பெருமானே மற்றாரை யுடையேன்'

99

என்றருளிச் செய்தார்? மாதருள் இழிந்தாரை யன்றி உயர்ந்தாரைக் கண்டும் அறியாத தீவினையாளரே, பரவை சங்கிலியாரை ஏனை மாதரோடு ஒப்பவைத் துரையாநிற்பர். ஆகவே, அம் மறுப்புரைகாரரும் அவரோ டொத்தாரும் பரவை சங்கிலி யாரை அடியாரல்லரென இகழ்ந்துரைக்குமுரை, ஆன்றோர் கருதிப்பாராத பொருள் இல் புல்லுரையா மென்று ஒதுக்கு தலே செயற்பால தென்க.

இனிப், பண்டைத் தமிழாசிரியர் அறத்தை இல்லறந் துறவறம் என இருவேறுவகைப்படுத் துரைத்தில ரெனவுந், துறவென்பது மனமாசு நீங்கி இறைவன் திருவடிக்கட் பதிந்த மெய்யன்பராய் எல்லா உயிர்கட்கும் இனியராய் நன்றி செய்தொழுகும் ஒழுக்கமேயாம் எனவும், இவ்வொழுக்கம் மனைவி மக்கள் முதலான அன்புடையார் குழுவிலிருந்தே செயப்பட்டதன்றி அவரை அறத்துறந்து செயப்பட்டதின் றெனவும், இதற்குப் பெரியபுராணத்தின்கட் சொல்லப்பட்ட அடியார் பெரும்பாலாரின் வரலாறுகளே சான்றாமெனவும், மனைவிமக்கள் முதலான அன்புடையார் தம்மையெல்லாம் அல்லற்பட விட்டுத் தாம் தனியே சென்று துன்புறும் போலித்துறவு பெளத்த சமண் மதங்கள் இத் தென்றமிழ்நாட்டிற் புகுந்த காலந்தொட்டு அவரைப் பார்த்து இங்குள்ள ஒரு சிலராற் கைப்பற்றப்பட்டதல்லது இங்கிருந்த சான்றோர்க்கு அது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/196&oldid=1583905" இலிருந்து மீள்விக்கப்பட்டது