உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

❖ மறைமலையம் -16

முழுவதும் உடம்பாடன் றெனவும் யாம் எமது தலைமைப் பேருரையிற் பண்டைப் பனுவல் மேற்கோள்களுடன் விரித்து ரைத்தேம். அவற்றிற்கெல்லாம் மாறு சொல்ல மாட்டாத அம் மறுப்புரைகாரர், பட்டினத்தடிகள் இல்லத் தொடர்பு நீங்கிச் செயப்படுவதாகிய துறவினையே மேலதாய்க் கொண்ட

எனக் கரைந்தார்.பட்டினத்தடிகள் பெளத்த சமண் கோட்பாடு இங்கே புகுந்த பின்னிருந்து, அவர் போற்றாமுந் துறவு புகுந்தவராகலின் அவர் அப் புறத்துறவினை ஒரோ விடங்களில் மேலதாய் மிகுத்துக் கூறினார். ஆனாலும் அங்ஙனந் துறவு புகுந்தபின் தாம் அதனாற்பட்ட துன்பங் களை நினைந்து பார்த்து, இல்லத்துறவு புகுந்தவனிலும் அகத்துறவு புகுந்தவனே கழிபெருஞ் சிறப்புடையன் என்பது தேற்றி,

66

“அறந்தான் இயற்றும் அவனிலுங் கோடி அதிகம் இல்லந்

துறந்தான், அவனிற் சதகோடி உள்ளத் துறவுடையோன்'

என்று அருளிச் செய்தமையும், பற்றற்றவர் உலகத்தவர்போற் காணப்படுதல் பற்றி அவரை வழிபடுதல் விடேன்மின் என்பது தேற்றுவாராய்,

“வேர்த்தாற் குளித்துப் பசித்தாற் புசித்து விழி துயின்று

பார்த்தால் உலகத் தவர்போ லிருப்பர் பற்று அற்றவரே.

என்று அவர் அருளிச்செய்தமையும் நினைவிற் பதிக்கற்பாற்று. ஓராசிரியர் கருத்தை முற்றும் ஆய்ந்து பாராது, அவர் ஒரோ விடத்து மொழிந்த சிலவற்றையே அவர்தங் கருத்துறுதியாகக் கோடலினும் பெரியதொரு பிழைபாடாவது பிறிதில்லை. எத்துணைச் சிறந்த ஆசிரியர்க்கும் நாட் செல்லச்செல்ல ஒழுகலாறுகள் வேறுபடுதலின் அவர்தம் உணர்வும் அறிவுங் கூடவே வேறுபடும்; அவர் தமது வாழ்நாள் எல்லையில் அவ்வக் காலங்கடோறும் இயற்றிப் போந்த நூல்களையும் உரைகளையும் நன்காய்ந்துபார்க்கும் அறிவுமதுகை யுடையார்க்கு அவ்வாசிரியர் தம் ஒழுகலாாறுகளும் அவை வாயிலாக அவரெய்திய உணர்வு வேறுபாடுகளும் நன்கு புலனாம். ஆகவே, ஓராசிரியர் ஒருகாற் சொன்ன கருத்தை, அவர் முழுதுந் துணிந்த கருத்தாகக் கோடல் ஆய்ந்துணரும் அறிஞர்க்குச் சிறிதும் ஆகாது; மற்று, அவ்வாசிரியர் அவ்வக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/197&oldid=1583910" இலிருந்து மீள்விக்கப்பட்டது