உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

மறைமலையம் -17

யாயிரம் பெயர்களாற் பேசப்பட்டு வருகின்றது. இத்தென்னாட் டில் மட்டுமேயன்றி, இலங்கையிலும், பர்மாவிலும், சிங்கப்பூர், பினாங்கு முதலான மலை நாடுகளிலும், மொரீசு, தென்னாப் பிரிக்கா முதலான இடங்களிலும் நமது தமிழ் மொழியைப் பேசுபவர்கள் பெருந் தொகையாய் இருக்கின்றார்கள். இவ்வாறு பெருந் தொகையினாராய் உள்ள தமிழ் மக்களெல்லாரும் அறிவிலும் நாகரிகத்திலும் உயர்ந்து விளங்கல் வேண்டுவ ராயின், அவர்கள் தமக்குத் தெரிந்துள்ள தமிழ்மொழியின் வழியாகவே அங்ஙனம் ஆகல்வேண்டும். மிகுந்த பொருட் செலவுங் காலக்கழிவும் வருத்தமுமின்றி அவர்களைக் கல்வியில் வல்லராக்குதற்கு இசைவான இந்த எளிய முறையை விடுத்து, அவர்கட்குப் புதுமையாக ஆங்கிலம் ஆரியம் முதலான மொழிகளைக் கற்பித்து அவர்களை உயர்த்தல் வேண்டுமென்று நினைப்பவர் ஒரு காலத்துந் தம்மெண்ணம் நிறைவேறப்பெறார். ஆதலால், தமிழ் மக்களை உண்மையாகவே முன்னேற்ற வேண்டுமென்னும் எண்ணம் உடையவர்கள், அவர்களுக்குரிய தமிழ்க்கல்வியின் வாயிலாகவே அதனைச் செய்யக் கடமைப் பட்டிருக்கின்றார்கள். மற்ற மொழிகளில் நாடோறும் புதியன வாய் வெளிவரும் அரும்பொருள்களை யெல்லாம் தமிழில் மொழி பெயர்த்துக் கற்பிக்கத் தலைப்பட்டால், இப்போது பதினைந்து ஆண்டுகளுக்குமேல் ஆங்கிலமொழியை மிக வருந்திக்கற்று ஒருவர் தெரிந்து கொள்ளும் பொருள்க ளெல்லாம், நமது செந்தமிழ் ஆழியில் ஏழெட்டு ஆண்டுகளில் இன்னுஞ் செவ்வையாகக் கற்றுத் தேறலாம். ஆங்கிலம் ஆரியம் முதலிய மொழிகளில் அவர் எவ்வளவுதான் கற்றுத் தேறினா லுந், அம்மொழிகளில் அறிந்த பொருள்களைத் தமிழ் மக்கள் எல்லார்க்கும் புலப்படும்படி எடுத்துச் சொல்லிப் துன்பப் படுத்தல் இயலாது; தமிழ் கற்றவரோ தாம் அறிந்த மொழி களைத் தமிழ் மக்களெவர்க்கும் நன்கு விளங்கும்படி எடுத்துச் சொல்லிப் பெரிதும் பயன்படுவர். இதனால் தமிழ்நாட்டவர் தமிழ் கற்பதொன்றே தமக்கும் பிறர்க்கும் பயன்படுதற்கு ஏதுவாம் என்க.

ம்

இனி, ஏழெட்டு நூற்றாண்டுகளாய்ப் புதிதாக, முளைத் தெழுந்து இப்போது ஆங்காங்கு வழங்கிவரும் பலவேறு மொழிகளையும் போன்றதன்று நமது தமிழ் மொழி. இ இன்ன காலத்திலேதான் தோன்றியதென்று எல்லாராலுங்

து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/103&oldid=1584309" இலிருந்து மீள்விக்கப்பட்டது