7
1. கடவுள் நிலை
சைவ சமயம்' என்பது இவ்விந்திய நாடு எங்கும் உள்ள தமிழ் நன்மக்களால் எத்தனையோ ஆயிர ஆண்டுகளுக்கு முன்னே தொட்டுக் கைக் கொள்ளப்பட்ட கடவுட் கொள்கையாகும். அஃது அவர்களை அறிவிலும் உருக்கத்திலும் ஒழுக்கத்திலும் மேலேறச் செய்து மற்றைய நாட்டவர்க்கு இல்லாத தனிப்பெருஞ் சிறப்பினை அவர்கட்கே தந்து, மற்றைச் சமயங்களுக்கெல்லாம் மேலான தனி நிலையில் வைகி
விளங்குவது.
வகி
அது, தமிழ் நன்மக்களை அறிவில் மேம்பட்டு விளங்கச் செய்தது எப்படியென்றாற், கூறுதும் இந்நிலவுலகத்தில் எங்கும் உள்ள எல்லா மக்களும், அவர்கள் நாகரிகத்திற் சிறந்திருப்பினும் நாகரிகம் இல்லாக் காட்டு வாழ்க்கையிலிருப்பினும், எல்லாருங் கடவுள் ஒருவர் உண்டு' என்னும் உணர்ச்சியும், அக்கடவுளை வணங்கும் விருப்பமும் உடையராய் இருக்கின்றனர். மக்கட் பிரிவினர் எல்லார் வரலாறுகளையும் மிக நுணுக்கமாக ஆராய்ந்து வரலாற்று நூல்கள் எழுதியிருக்கும் ஆங்கில ஆசிரியர்கள், 'கடவுளுணர்ச்சியில்லாத ஒரு மக்கட் கூட்டத் தாரை ஓரிடத்துங் காண்டல் இயலாது' என்று முடிவுகட்டிச் சொல்லுகின்றார்கள். நமது நாட்டிலும் மிகத் தாழ்ந்தோர் முதல் மிக உயர்ந்தோர் ஈறாக உள்ள எத்திறத்தவருங் கடவுளுணர்ச்சியும் அவ்வுணர்ச்சிக்கு ஏற்ற பலவகையான வணக்கமுறைகளும் உடையராய் இருத்தலை நாடோறும் நாம் எங்கும் கண்டு வருகின்றோம். ஆகவே, கடவுளுணர்ச்சியும் கடவுள் வணக்கமும் இல்லாமல் மக்களாய்ப் பிறந்தவர்கள் உயிர் வாழ்தல் இயலாதென்பது இனிது விளங்கும்.
இனி, மக்கள் எல்லாரும் ஏன் ங்ஙனம் கடவுள் உணர்ச்சியுங் கடவுள் வணக்கமும் உடையராயிருக்கின்றன