உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

❖ LDM MLDMOELD -17 ❖

ரென்றால், அவர்களனைவரும் இந்த உடம்பின் துணையும், இந்த உடம்பு உலவும் நிலத்தின் துணையும், இந்த உடம்புக்கு வேண்டும் பொருள்களின் துணையும் வேண்டியவர்களா யிருக்கின்றனர். வியப்பான இந்த உடம்பையும், இந்த உலகத்தையும் இந்த உலகத்துப் பொருள்களையும் மக்கள் தாமாகவே உண்டாக்கிக் கொள்ள வல்லவர்களாய் இல்லை. ஆகவே, இத்தனை வியப்பான பண்டங்களையும் தமக்கு ஆக்கிக் கொடுக்கத்தக்க பெருவல்லமையும் பேரறிவும் பேரிரக்கமும்

உள்ள

ஒரு முழுமுதற் கடவுள் கட்டாயம் இருக்க வேண்டுமென்னும் உணர்ச்சி எல்லார் உள்ளங்களிலும் இயற்கையாகவே தோன்றா நிற்கின்றது.

இனி, எவராலும் படைக்க முடியாத இத்தனை உடம்பு களையும், இத்தனை உலகங்களையும் இத்தனை அரும்பொருள் களையும் தமக்குப் படைத்துக் கொடுத்த எல்லாம் வல்ல இறைவன் ஒருவன் உண்டு என்னும் உணர்ச்சி வந்தவுடனே, அவனைக் காணுதற்குங் கண்டு வணங்குதற்கும் எல்லாருக்கும் பேரவா உண்டாதலும் இயல்பேயாம்.

சலவைக்கல்லில் திருத்திச் சமைக்கப்பட்ட மிக அழகான ஓர் உருவத்தையேனும், பல வண்ணங்களாற் குழைத்து திறமாக எழுதப்பட்ட ஓர் ஓவியத்தையேனும், வானத்தில் பறக்கும் ஒரு மயிற்பொறியையேனும் க சுவைத்த சொல்லும் பழுத்த பொருளும் நிறைந்த ஒரு நூலையேனும், இயற்றிய கைத்தொழிலாளரும் நல்லிசைப் புலவருந் தமது காலத்தில் உயிரோடிருக்கின்றனர் என்று தெரிந்தால் அவர்களைக் காண்டற்குங் கண்டு வணங்குதற்கும் மக்கள் எவ்வளவு விழைவுடையவராய் விரைந்து செல்கின்றனர்! சென்று, அவர்களை ள மனம் உருக வணங்கி வாழ்த்தி எவ்வளவு இன்புறுகின்றனர்!

சிற்றறிவுடைய மக்கட் பிறவி எடுத்தாரிலேயே சிறிது சிறந்த அறிவு வாய்ந்த கைத்தொழிலாளரையும் நல்லிசைப் புலவரையும், அவர் அமைக்கும் உருவ அமைப்பு நூல் அமைப்பின் அழகால் மனம் இழுக்கப்பட்ட மக்கள் தேடிச் சென்று கண்டு வணங்கப் பேராவல் கொள்ளுவார்களானால், எவராலும் அமைக்க முடியாத எண்ணிறந்த உடம்புகளையும் எண்ணிறந்த உலகங்களையும் எல்லையற்ற உலகத்துப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/33&oldid=1584233" இலிருந்து மீள்விக்கப்பட்டது