உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

மறைமலையம் 17

படுத்தும் படி அவருக்கு மனக்கிளர்ச்சியினை விளைவித்தல் வேண்டும்.

னிச், சிவபிரான்கோயில்களில் நிறுத்தப்பட்டிருக்குந் திருவுருவங்கள், இறைவனுக்கு என்றும் உரிய அருளுருவத் தையும், அன்பர்க்கு அருள்செய்யும் பொருட்டு முதல்வன் ஓரொருகாற்கொண்ட திருவுருவத் தோற்றங்களையும் அன்பர்க்கு நினைவில் எழுப்புதற் பொருட்டு அமைத்த வடிவங்களே யாகும். இவ்வடிவங்களை வணங்கச்செல்லும் அன்பர்கள் இவற்றைக் கண்டவுடன் ஐயன் அருள் உருவங்களை நினைந்தவராகி அகங்குழைந்து உருகுவர். ஆண்டவன தருளுருவத்திற்குச் செய்யும் எண்ணத்துடன் தம் அன்பினாற் பூவும் நீரும் இட்டு ஆடையணி கலன்கள் சாத்தி அவ்வடிவங் களை வணங்குதலும் அவ் அன்பிற்கு அன்பிற்கு அடை அடையாளமாகும். இறைவனருளைப் பெறுதற்கு மெய்யுணர்வும் அதன்வழித் தோன்றும் பேரன்புமே வாயில்களாதலாலும், இக்காலத்தில் மக்களிற் பல்வகைக் கூட்டத்தாரும் அறிவைப் பெருகச்செய்து, அறிவாலும் அன்பாலும் ஆண்டவனை அடைதற்கு மிக முயன்றுவருத லாலுஞ் சைவசமயிகளான அறிஞரும் ஞானநெறியிற் றமது கருத்தை மிகுதியாய்ச் செல்லவிடுதல் வேண்டுமேயல்லாமல், வெறுந் தொழில்நெறியிற் புகுந்து ஒப்பனைகளின் பொருட்டுந் திருவிழாக்களின் பொருட்டும் ஆயிரக்கணக்காகவும் நூறாயிரக் கணக்காகவும் போட்டி போட்டுக் கொண்டு பொருள்களைச் செலவழித்துச் செருக்கடையலாகாது.எல்லா உலகங்களையும் எல்லாப் பொருள்களையும் உடைய பெருஞ் செல்வரான நம் ஆண்டவனுக்கு, ஏழைமக்கள் நல்ல அல்லா வழிகளில் ஈட்டிய பொருளைத் திரள் திரளாகக் கொடுத்தாலும், அவன் அதனைக் கண்டு ஏமாற்றித் தனது அருளைக் கொடுத்துவிடுவான் அல்லன். நம் ஐயனுக்கு வேண்டுவன அன்பும் அன்பொழுக்க முமேயாகும். அதுபற்றியன்றோ திருநாவுக்கரசு நாயனாரும்,

“நெக்கு நெக்கு நினைப்பவர் நெஞ்சுளே

புக்கு நிற்கும் பொன்னார் சடைப் புண்ணியன் பொக்கம் மிக்கவர் பூவும் நீருங்கண்டு

நக்கு நிற்பன் அவர்தமை நாணியே”

என்று அருளிச்செய்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/43&oldid=1584244" இலிருந்து மீள்விக்கப்பட்டது