உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

  • மறைமலையம் -17

ஆராய்ந்து பாராமற்கூறுஞ் சொற்கள் பொருளற்ற புன்மொழி களாய் இருக்கின்றன.

ஏனென்றாற், பேரறிவுப் பொருளாகிய அதற்கு அறிவும், பேரருட்பொருளாகிய அதற்கு அருளும், பேரின்பப் பொருளாகிய அதற்கு இன்பமும், பெருவல்லமைப் பொரு ளாகிய அதற்கு வல்லமையும் அரிய பெரிய குணங்களாயிருக்க, அதனைக் குணமற்ற நிர்க்குணப் பொருள் என்பது எவ்வாறு பொருந்தும்? குணமில்லாத பொருள் எங்கேனும் உண்டா? குணமில்லாதது பொருளாகுமா? என்று இங்ஙனமெல்லாஞ் சிறிதாயினும் ஆராய்ந்து பார்க்க வல்லவர்க்கு நிர்க்குணம் நிர்க்குணோபாசனை முதலிய சொற்களெல்லாம் பொருளில்லாத வெற்றாரவார உரைகளே யாம் என்பது தெளிவாக விளங்கும். அங்ஙனமாயின், அறிவு நூல்கள் சிற்சில இடங்களிற் கடவுளை நிர்க்குணர் என்றோதுவது ஏனென்றாற் சத்துவம், இராசதம், தாமதம் என்னும் வாலாப் பருப்பொருட் குணங்கள் மூன்றும் அவரிடம் இல்லையென்பதை உணர்த்துதற் பொருட்டாகவே அங்ஙனம் அவை ஒவ்வோரிடங்களிற் கூறினவென்பது சிவஞான போதமாபாடியத்தில் நன்கு விளங்கப்பட்டிருக்கின்றது.

னிக், கடவுள் பேரறிவுப் பொருளென்பது முடிக்கப் பட்டதனாலும், அவ்வறிவும் உலகத்திலுள்ள எல்லாப் பொருள் களின் வடிவங்களையும் உண்டு பண்ணுவதொன்றாதலால் அவற்றை உண்டுபண்ணுதற்கு முன்னும் பின்னும் எப்போதும் அவ் அறிவின்கண் அவற்றிற்கு முதலான எல்லா உருவங்களும் உண்டென்பது பெறப்படுதலானும் கடவுள் அருவாய் ருப்பரென்னுமுரையும் வெற்றுரையே அல்லது பிறிதன்று. அங்ஙனமாயின் அறிவு நூல்களில் அவர் அருவரென்றும் ஒரோவிடங்களிற் கூறப்படுதல் ஏனென்றால், மக்களுடைய ஊனக் கண்களுக்கு அவருடைய அருளுருவம் புலப்படமாட்டாதாகலின், அவ்வாறு சொல்லப்பட்டதென்க. அருட் கண்ணுடையார்க்கு அவனது அருளுருவம் விளங்கத் தோன்றுமென்பதற்குத் திருஞானசம்பந்தப் பெருமான் ஏதும் அறியாக் குழவிப் பருவத்தே அவன்றன் றிருவுருவத்தைக் கண்டு பாடியதும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/71&oldid=1584277" இலிருந்து மீள்விக்கப்பட்டது