உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

மறைமலையம் 19

மக்களுக்கு இருபதாண்டும் ஆண் மக்களுக்கு இருபத்தைந் தாண்டும் நிரம்பும்முன் அவர்களை செய்வித்தல் ஆகாது. அங்ஙனம் மணஞ்செய்யுமிடத்தும் ஒருவரை

ஒருவர் அன்புபாராட்டுதல் அறிந்து அதன்பின் அவர்களை மணம் பொருத்தல் வேண்டும். ஆணையாவது பெண்ணை யாவது ஆடு மாடுகளைப்போல் விலைகொடுத்துவாங்குங் கொடிய வழக்கத்தை வேரோடு களைவதற்கு எல்லாரும் மடிகட்டி நிற்றல் வேண்டும். ஏனென்றால் அன்பில்லாத வாழ்க்கையால் வருந் தீமைகள் அளவில்லா தவைகளாய் இருக்கின்றன. அன்பில்லாத சேர்க்கையிற் பிறக்கும் பிள்ளைகள் குறுகிய வாழ்நாளும் பல தீய தன்மைகளும் உடையராய் இருக்கின்றனர். அன்புவளர்ச்சிக்கு ஏதுவாக ஆண்மக்களும் பெண்மக்களுங் கள்ளங்கவடின்றி நடமாடச் செய்தல் வேண்டும். பெண் மக்களைக் கல்வியிலும் நன்முறையிலும் பழக விடாமல், மணங்கூடும் வரையில் அவர்களை அறைகளில் அடைத்து வைப்பது பெருந்தீமைகளை விளைவிக்கின்றது. பெண் மக்களைப் பெரும்பாலுந் தமிழ்முதலிய தாய்மொழிக் கல்லூரியிலேயே கல்வி பயிற்றுவித்தல் வேண்டும். உணவமைத்தல் இல்லறம் நடப்பித்தல் குழந்தைகளைப் பாதுகாத்தல் முதலிய முறைகளில் தேர்ச்சிபெற வேண்டுவது பெண்மக்களுக்கு ன்றியமையாததாகும். ஆண்மக்கள் தாய்மொழியோடு மற்ற மொழிகளையும் நன்கு பயிலச் செய்தல் வேண்டும்.

முப்பதாண்டுகட்கு உட்பட்ட பெண்கள் கணவனை இழந்து விடுவார்களானால், அவர்களைத் திரும்ப மணஞ் செய்து கொடுத்தல் வேண்டும். ஆண்மக்களில் நாற்ப தாண்டுக்கு மேற்பட்டவர்கள் இளம்பெண்களை L மணஞ் செய்தல் ஆகாது. அப்படிச்செய்ய முந்துகின்றவர்களை எல்லாவகையாலும் தடை செய்தல் வேண்டும். நாற்ப தாண்டுக்கு மேற்பட்ட ஆண்பாலார் மணஞ்செய்து கொள்ள வேண்டுவார்களானால் தம் ஆண்டுக்கு ஏறக்குறைய ஒத்த கைம் பெண்களையே அவர்கள் மணஞ்செய்து கொள்ளும் படி தூண்டுதல் வேண்டும்.

தமிழ்மக்களிற்

பெரும்பாலார் ஒருவர்பாலுள்ள குற்றங்களை மற்றவர் எடுத்துப் பேசுபவராய்ப் பகைமையையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/133&oldid=1585725" இலிருந்து மீள்விக்கப்பட்டது