உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

187

66

6. நக்கீரனார் தெய்வப்புலமை மாட்சி

'தன்றோ ணான்கி னொன்றுகைம் மிகூஉங்

களிறுவளர் பெருங்கா டாயினு

மொளிபெரிது சிறந்தன் றனியவென் னெஞ்சே.”

முகவுரை

செழுந்தமி ழென்னுங் கொழுந்தமிழ்க் குழவியை மன்றினுட் குனிக்குங் கொன்றையஞ் சடையோன் மறுமுனி தவத்திற் குறுமுனிக் கருள வாங்கவ னினிதெழுந் தேற்றுப் பாங்குறக்

குறங்கினி லிரீஇ வெரிந்புறந் தைவந்

தியல்வகை யென்னும் பயில்பா லூட்டிச் சின்னாள் வளர்த்த பின்னர் மன்னிய வெள்ளியம் பலத்துட் டுன்னிய பெருமான் பீடுற வமர்ந்த கூடன்மா நகரின் மெய்பெற விருந்த தெய்வப் புலமைப்

பெருமதிப் புலவோர்க் கருவையினுதவ, வவரு முளந்துளும் புவகையினலம்பெற வேற்று நூற்பொரு ளென்னுஞ் சீர்க்கலன் செறிந்து நூலெனு மாடையும் வாலரைக் கொளீஇச் சொற்சுவை பொருட்சுவை கனிந்த பற்ப னல்லுணா நாடொறும் பல்வே றூட்டிச் சங்க மென்னும் பொங்குபூந் தடத்தினு மாலவா யென்னுங் கோலமார் காவினும் வடமொழி யென்னு மடங்கெழு தோழியொடு முடம்படுத் தொருங்கு விடுப்பக் குடம்புரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/220&oldid=1585827" இலிருந்து மீள்விக்கப்பட்டது