உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256

10. உள்ளது போகாது இல்லது வராது

இந்தப் பழமொழி பொதுவாகத் தமிழ் நாட்டில் யாண்டும் பரவி வழங்குவதொன்றாயினும், அதன் பொருள் எந்த நாட்டிலுள்ள எந்தக் குலத்தார்க்கும் எந்தச் சமயத் தார்க்கும் உடன்பாடான பொதுமையுடையதேயாம். எளிதாக நாடொறும் வழங்கும் இப்பழமொழிப் பொரு ளருமை உற்றுநோக்குவார்க்கு இனிது விளங்குமாயினும், அதனை ஆழ்ந்து ஆராய்வார் உலகில் ஒரு சிலரேயாவர். ஆகலின், உலகமெல்லாம் ஒப்புக்கொண்டு வழங்கும் இதன் அருமைப்பாடு ஒரு சிறிது விளக்கிக் காட்டுவாம்.

தான்

ர’

இனி, இதன் பொருள் 'முன்னைக்காலத்தும் நிகழ் காலத்தும் வருங்காலத்தும் இருப்புப்பெற்ற ஒரு பொருள் இல்லாமற் போவதுமில்லை, மூன்று காலங்களிலும் இல்லாத பொருள் ஒருகாலத்து உண்டாவதுமில்லை என்பதேயாம். அவ்வாறாயின், 'விண்ணகத் தாமரை 'முயற்கொம்பு' முதலிய சொல்லாட்சிகள் காணக்கிடத்தல் என்னையெனின்: 'விண்ணகம் என்பதும் உள் பொருள்; தாமரை” என்பதும் என்பதும் உள்பொருள் தாமரை தடாகத்தில் இருப்பது. தடாகத்தின்கண் இருப்புப்பெறுவ தாகிய தாமரைக்கு விண்ணகத்தின்கண் நேர்ச்சியில் லாமையால் விண்ணகத்தாமரை” என்பது என்பது, சொற்கள் தம்முள் ணங்கிப் பொருடருதற்கு ஏதுவாகிய தகுதிப் பொருத்தம் இல்லாமைகாட்டித் தாமரையினிருப்பை விண்ணகத்தின்கண் எதிர்மறுத்தவாறாயிற்று. இவ்வாறே முயற்கொம்பு' என்புழியும் 'முயல்' என்பதோர் உள் பொருள்; 'கொம்பு' என்பது பிறிதோர் உள்பொருள். ஆடு, மாடு, மான் முதலியவற்றின்கண் இருப்புப் பெறுவ தாகிய

கொம்பு' என்பதொரு பொருள் தனக்கு நிலைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/289&oldid=1585901" இலிருந்து மீள்விக்கப்பட்டது