உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுரைக்கோவை

57

முன்வந்து நின்று உண்மையாராய்ச்சி செய்து போதருகின்ற மையின், அந்நல்லார் வழிநின்று யாமும் எம்மாராய்ச்சியிற் கண்டவற்றை விளங்கக் காட்டத் துணிந்து இன்றிதனை விரித்துரைப்பப் புகுந்தாம். இது நிற்க.

கற்றறிவுடையோராற்

இனி மேலே காட்டிய பண்டைமொழிகளான தமிழ் முதலான சொற்களுள் இன்றுகாறும் பரவைவழக்காய் வருவது தமிழ் ஒன்றேயாம். அற்றன்று, இலத்தீன் முதலான சொற்களும் ஆண்டாண்டுப் பயிற்சி செய்யப் படுதலும், ஆ பேசப்படுதலுமுடையன வாய் வருதலின் அவை வழக்கு வீழ்ந்தனவாகா வெனின்; நன்று சொன்னாய், ஒரு சொற் பரவை வழக்குடையதோ அன்றோ வெனத் துணிவுகாண்டல் அவ்வாறன்று, மற்று அது கற்றறிவில்லாச் சிறுமகாரானும் பெண்டிரானும் ஆடவ ராணும் இல்லந்தோறும் உரை வழக்குற்றுப் பெ பருகி நடைபெறுதலொன்றானே அவ்வாறாதல் இனிது துணியப் படுமென்பது. இனி இலத்தீன் முதலிய சொற்கள் அங்ஙன மில்லந்தோறுஞ் சிறுமகாரானும் பிறரானும் வழங்கப்படுதல் காணாமையானும், தமிழோ அவ்வாறின்றி யாண்டும் பெருகிய வழக்காய்த் தென்றமிழ் நாட்டகத்தே நடை பெறுதலானும் அவ்விலத்தீன் முதலான சொற்கள் உலக வழக்கு வீழ்ந்தனவா மென்பதூஉம், தமிழொன்றே உலக வழக்குடையதா மென்பதூஉந் தேற்றமாம். எனவே, தமிழ் மொழிப்பயிற்சி செய்தல் அவ்விலத்தீன் முதலான ஏனைமொழிப் பயிற்சியினும் பயப்பாடு பெரிதுடையதா மென்பது இனிது விளங்கலின், இப்பெற்றி யறியாத சென்னைப் பல்கலைக் கழகத்தார் தமிழ்ப் பயிற்சி செய்தலை அறவே களைந்துவிடல் வேண்டு மென்றுரைத்த வுரை பெரியதோர் இழுக்குமாம் ஏதமுமாம். இது கிடக்க,

இனி அத்தமிழ்மொழி, வடமொழி இலத்தீன் முதலான மற்றவ்வெல்லாச் சொற்களினும் முற்பட்டுத் தோன்றிய பழைமை யுடைத் தென்பது ஒரு சிறிதுரைப்பாம். தமிழ் மொழியிலேயுள்ள சொற்களெல்லாம் அ,ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள என்னும் பன்னீருயிரெழுத்துக்களையும், இவ்வுயிர்களோடு கூடிய க், ச், த், ந், ப், ம்,வ், ய், ங், ஞ் என்னும் பத்து மெய்யெழுத்துக்களையும் முதற்கொண்டு தொடங்கு

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/90&oldid=1585677" இலிருந்து மீள்விக்கப்பட்டது