உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

மறைமலையம் 19

கின்றன; ட், ண், ர், ல், ழ், ள், ற், ன் என்னும் எட்டு மெய்யெழுத்துக்களைக் கொண்டு அவ்வாறு தொடங்குகி ன்றில. ஆரியம், இலத்தீன் முதலிய மொழிகளோ இவ் வெழுத்துக்களையும் முதலிட்டுத் தொடங்குஞ் சொற் களுடைய னவாய்க் காணப்படுகின்றன. ஆரிய மொழியிற் காணப்படும் டம்பம், ரத்நம், லவணம் முதலிய சொற்களை அம்மொழியிற் கிடந்தவாறே கூறாது இடம்பம், அரத்நம், இலவணம் முதலியனவாகத் திரித்துத் தமிழ்மக்கள்

.

வழங்குகின்றார். நன்னூல் முதலான இலக்கண நூல்களும் அவ்வாறே வழங்குமாறு விதிக்கின்றன. அச்சொற்களை அம்மொழியிற் கிடந்தபடியே கூறாது. அங்ஙனந் திரித்துக் கூறல் வேண்டுவதென்னை யெனவும், தமிழ்ச் சொற்கள் ட், ண் முதலான அவ்வெட்டு மெய்யெழுத்துக்களை முதல் நிறுத்துத் தொடங்காமை என்னை யெனவும் நுணுகி யாராயும்வழித் தமிழ்மொழி மற்று எவ்வெல்லா மொழிகளினும் பழைதா மென்னும் உரைப்பொருள் தெற்றென விளங்காநிற்கும். அவ்வாறாதல் காட்டுதும்.

இனி, ஒரு மொழியின் தோற்ற முறையினை நோக்க வல்ல நுண்ணறிவாளார்க்கு, விலங்கினங்களைப்போல் அநாகரிக நிலையிலிருந்து சொற்சொல்லுமா றறியாது குறிப்பா னுணர்த்திப் பின்னும் விளங்காமையான் இயற்கை யினிகழும் ஒலிவகைப்பற்றிக் கூற்று நிகழ்த்திச் சிறிது சிறிதாய்ச் சொற்சொல்லுமாறு அறிந்து அறிவு கூடப் பெற்றுவரும் மக்கட்டன்மையும், தாய் தந்தையர் கூட்டுறவானே சொற்சொல்லுமாறு அறிந்து அறிவுகூடிவருஞ் சிறுமகா ரியல்புந் தம்முளொத்த பெற்றிமையுடையவாமாறு இனிது விளங்கும். எனவே ஒருமொழியின் தோற்ற முறை நன்காராய்ந் தளந்தறிதற்கு இன்றியமையாப் பெருங்கருவியாய் முன்னிற்பது சிறுமகார் வளர்ச்சி முறையை உற்றுநோக்கி யுணர்தலேயாம். உயிரெழுத்துக்களொழிய மெய்யெழுத்துக்களுட் சிறு மகாரான் முதன்முதன் மொழியப்படும் ஒலி யெழுத்து இதழிரண்டனையுஞ் சிறிது மெல்லென்று கூட்டுதலானே பிறக்கும் ம என்பதேயாம். அங்ஙனம் இதழ் கூட்டித் தந் தாயைக் கூவும்வழி அடுத்தடுத்து மா மா என்று சொல்லுதலானே அம்மா என்னுஞ் சொல் தோன்று வதாயிற்று. இனி அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/91&oldid=1585678" இலிருந்து மீள்விக்கப்பட்டது