என்றும்,
- மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்
“பிட்டு நேர்பட மண்சுமந்த
பெருந்துறைப் பெரும்பித்தனே.”
―
1
103
என்றும் தமது அருமைத் திருவாசகத்திற் பலவிடத்தும் எடுத்தோதுவாராயினர்.
கொற்றாளாய் வந்த அப்பெருமான்
பித்தனைப் போல் ஆடிப் பாடி விளையாடி வேலை செய்யாது திரிந்தமை யினைக் கண்ட ஏனையோர் அவனைப் 'பித்தனோ!' என்று கூறினமை தெரித்தற்கே,
“பிட்டு நேர்பட மண்சுமந்த
பெருந்துறைப் பெரும்பித்தனே”
என்றருளிச் செய்தார்.
இனி,
அக்கொற்றாள்
நாள்முழுதுங் கரையடை
யாமற் காலம் போக்கினமை கண்டு சினந்து அற்றை மாலையில் அவனை அடித்தவர் அரசன் றன் ஏவலரே என நம்பியார் திருவிளையாடலும் திருவாதவூரர் புராணமுங் கூறாநிற்கப் பரஞ்சோதியார் திருவிளையாடல் ஒன்றுமே அப்போது அக்கொற்றாளை அடித்தவன் பாண்டியன்
கூறுவதாயிற்று; மற்றுத் திருவாதவூரடிகளோ,
66
கண்சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை
மண்சுமந்து கூலிகொண்டு அக்கோவான் மொத்துண்டு புண்சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய்
எனவும்,
“மண்பான் மதுரையிற் பிட்டமுது செய்தருளித் தண்டாலே பாண்டியன் தன்னைப் பணிகொண்ட புண்பாடல் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ”5
994
எனக்
எனவும், நேரிருந்துகண்டு பாண்டியனே சிவபிரானைத் தண்டாலே அடித்தனனென்று கூறுகின்றமையின், ஏனை யிரண்டு புராணங்களின் கூற்றும் இதன்கட் பிழைபடுகின்ற தெனவும், பரஞ்சோதியார் திருவிளையாடற் கூற்றொன்றுமே