30
மறைமலையம் - 22
கலைகளையெல்லாம் பல்லாண்டுகள் முயன்று கற்று அறிவு நிரம்பித், தாய்தந்தையர் சுற்றத்தவரால் மணஞ் செய்விக்கப் பெற்று, அவரிடையே செல்வவாழ்க்கையில் வாழ்ந்து, பின் பாண்டிய அரசற்கு அமைச்சராய் அமர்ந்து, உலகியலுள் விரசிக் காணப்படும் நலந் தீங்குகளையெல்லாம் மாறிமாறி நுகர்ந்து,பின்னர்ச் சடுதியிலே திருப்பெருந்துறையில் இறைவனைக் கண்ணாரக் காணப்பெற்று அவன் றிருவடிக்கு ஆளானவர்; இவ்வாறவர் உலகவாழ்வி னூடுசென்று சிவபிரான்றிரு
வருளைப் பெற்ற குறிப்பு,
"மாடுஞ் சுற்றமும் மற்றுள போகமும்
மங்கையர் தம்மோடுங்
கூடி அங்குள குணங்களால் ஏறுண்டு குலாவியே திரிவேனை
வீடு தந்துஎன்றன் வெந்தொழில் வீட்டிட
மென்மலர்க் கழல் காட்டி,
ஆடுவித்துஎனது அகம்புகுந்து ஆண்டதோர்
அற்புதம் அறியேனே”
என்று அவர் தாமே அருளிச்செய்த திருப்பாட்டால் நன்கு விளங்கா நிற்கின்றது.
இத்தகையதொரு
செய்யுளைத்
ன்னோ
திருஞானசம்பந்தர் அருளிய திருப்பதிகங்களிற் காண்டல் அரிதினும் அரிது; மற்றுத், திருவாசகத்திலோ ரன்ன கருத்துக்கள் உள்ளடங்கிய செய்யுட்கள் பற்பல.
ங்ஙனம் மக்கள் வாழ்க்கையில் எங்குங் காணப்படுங் குற்றங் குறைகளை ஒருவர் நினைந்து, அத்துணைத் தீங்கு களையும் பொறுத்து எத்துணையுந் தூயனாகிய இறைவன் எத்துணையும் எளிய தம்மை ஒரு பொருட்டாக்கி ஆளும் அருட்டிறத்தையும் நினைந்து, அவை ரண் னையும் ஒப்பிட்டு நோக்கி நெஞ்சம் நெக்கு நெக்குருகி அலறிப் பாடுவராயின் அவர் பாடும் அச் செய்யுட்களே, நமது சிறுமை யினையும் எல்லாம் வல்ல ஐயன்றன் அருட்பெரும் பெருமை யினையும் மறுதலைப் படுத்துக் காட்டி நமதுள்ளத்தை உருக்கி நம்மை இறைவன் றிருவடிக்கு ஆளாக்குவனவாகும். இவ்வாறு மக்கட்பிறவியின் இழிபினை இறைவன் முன்னிலையில்