உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

மறைமலையம் 22

வந்த அவ்வாண்டவனுருவினைத் தமது அகக்கண் எதிரே ஓவாது கண்டு உருகுதற்கு உரியவரானார். திருப்பெருந்துறையிற் குருந்தமரநீழலில் அடியவர் குழாத்தொடும் போந்தமர்ந்து தம்மை ஆட்கொண்ட குருவடிவினையும் அதன்பிற் குதிரைகள் கொணர்ந்த வாணிகச்சாத்திற்குத் தலைவனாய் ஓரழகிய பரிமீது இவர்ந்து பாண்டியன்முன் போந்து தம்பொருட்டு அக்குதிரையின் பல்வேறு நடைகளையும் அவ்வரசன்முன் நடாத்திக்காட்டிய சேவகன் வடிவினையும், அதன்பின் மதுரைப் பிட்டுவாணிச்சி பொருட்டு மண்சுமக்குங் காற்றாளாய்ப் போந்து பாண்டிவேந்தன் கையாற் பிரம்படியுங்கொண்டு மறைந்த ஐயனருமைத் திருவுருவினையும் மாணிக்கவாசகர் நேரே கண்டவராதலின், பொல்லாத புல்லறிவிற் கடைப்பட்ட மக்களுக்காகத், தேவர்க்கும் அரியனான சிவபிரான் அத்துணை எளியனாய் வந்து செய்த பேரருட்டிறத்தை நினைந்து நினைந்து ஆற்றா நிலையினராகி அவ் வாண்டவன்பால் வைத்த பேரன்பால் ஆவியோடு ஆக்கை புரைபுரை கனியப் பெற்றார். பலகாற் பல்லாருங் காணவந்து இறைவன் மாணிக்கவாசகர்க்கு அருள்செய்தவாறு போல் வேறெவர்க்குஞ் செய்திலன். இஃது அடிகளே,

66

என்று

“கல்லாத புல்லறிவிற் கடைப்பட்ட நாயேனை

வல்லாள னாய்வந்து வனப்பெய்தி யிருக்கும்வண்ணம் பல்லோருங்‘ காணஎன்றன் பசுபாசம் அறுத்தானை எல்லோரும் இறைஞ்சுதில்லை யம்பலத்தே கண்டேனே

அருளிச்செய்தவாற்றால்

தெற்றென

விளங்கா நிற்கின்றது. திருஞானசம்பந்தப்பெருமானுக்குப் புலனாய்த் தோன்றிய இறைவனுருவம் வேறெவர்க்கும் புலனாயிற்றில்லை. அப்பர்க்குத் தோன்றியதும் அப்பெற்றியதே, சுந்தரர்க்குப் பார்ப்பன முதியோனாய்த் திருமணப் பந்தலிற் றோன்றிய வடிவம் பல்லாருங் காண வந்ததொன்றே யாயினும், அது திருவெண்ணெய் நல்லூர்க்கு அவரை ஈர்த்துச் சென்று மறைந்தக்கால், அதனைக் கண்டு தெய்வமெனத் தெளிந்தவர் சுந்தரரைத் தவிர மற்றையோர் அல்லர். மற்று, மாணிக்கவாசகர் பொருட்டுக் குருவடிவிற் போந்து மறைந்த முதல்வனையோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/65&oldid=1587511" இலிருந்து மீள்விக்கப்பட்டது