உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

—

தமிழ் முகவுரைகள் மறைமலையடிகள்

நூல்களும் வேண்டும். யாம் எம்முடைய வருத்தத்தையுங் பொருட்செலவினையும்

காலக்கழிவினையும்

பாராது, உலகத்தில் உண்மை விளங்கி எல்லாரையும் உய்வித்தல் வேண்டும் என்பதொன்றனையே கடைப்பிடியாகக் கொண்டு, ஒவ்வொன்றுக்கும் மேற்கோள்களும் அவையுள்ள இடங்களுங் குறித்திருத்தலை அன்பர்கள் கருதிப்பார்த்து, முறையினைத் தாமுங் கையாண்டு உண்மையராய்ச்சியினை ஓம்புவாராக!

ம்

ங்ஙனம் ஆராய்ந்து செல்லும் நெறியிற் பிழை யெனக் கண் வைகளை மறையாது, அவை பிழை படுதலைக் கிளந்து சொல்லியிருக்கின்றேம். எல்லாராலுந் தெய்வத்தன்மையுடையவராகக் கொள்ளப்பட்ட ஆசிரியர் நூல்களிலும் பிழையெனக் கண்டவைகளை மறையாது வெளிப் படையாக எடுத்துக்காட்டியிருக்கின்றேம். கடவுளல்லாத ஏனை மக்களெல்லாரும் எத்துணைதான் சிறந்வராயிருப்பினும் பிழைபடாதிரார். இது, தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனாரே.

66

“அரியகற்று ஆசற்றார் கண்ணுந் தெரியுங்கால் இன்மை யரிதே வெளிறு’

و,

என்று அருளிச்செய்தமையானுந் தெளியப்படும். ஆகவே, அறிவில் மிகச் சிறந்த சான்றோர்களும் ஒரோவழிப் பிழைபடுவராயின், அவர் செய்த அப் பிழைகளை உண்மை விளக்கத்தின் பொருட்டு எடுத்துக்காட்டுதல் அவர்பால் யாம் வைத்துள்ள அன்புக்கும் நன் மதிப்புக்கும் எள்ளளவும் பழுதுசெய்யாது. ஒரோவொரகாற் பேரறிவினர்பால் மெய்யல் லாதன தோன்றுதலுஞ், சிற்றறிவினர்பால் மெய்யாவன தோன்றுதலும் உலகியல் நிகழ்ச்சிகளிற் காணக்கிடத்தலின், உண்மையாரச்சி செய்பவர்கள், அவ்வவர்தம் பெருமைசிறுமை பாராது, அவ்வவற்பாற் புலனாவனவற்றிலுள்ள பொய்ம்மை மெய்ம்மைகளை ஆராய்ந்து கண்டெழுதுதலே, உலகினை வஞ்சியாது அதற்கு நன்மைபயக்கும் விழுமிய ஒழுகலாறாம்; இ து தேற்றுதற் கன்றோ திருவள்ளுவனாரும்,

ஆசிரியர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/234&oldid=1590281" இலிருந்து மீள்விக்கப்பட்டது