உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79

4. கடவுளுக்கு அருளுருவம் உண்டு

அன்பர்கள்

சிலர் கடவுளுக்கு உருவம்

ல்லை

யென்றும், மக்களுக்குரிய கண், கால் முதலிய உறுப்புகளின் வடிவங்களை அவர்க்கேற்றிக் கூறுதல் குற்றமாமென்றும் கூறுகின்றார்கள். ஆயினும் கடவுளின் உண்மை நிலையை நுணுகி ஆராயுங்கால் அவர்க்கும் உருவம் உண்டென்பது புலனாகின்றது. உருவமென்னுஞ் சொல்லைக் கேட்டவள வானே அதனைக் கடவுளுக்குக் கற்பித்தல் வழுவாமென்று நினைத்தலாகாது. உருவம் மூன்று வகைப்படும்; அறிவில் லாத கல், மண், நீர், நெருப்பு முதலியவற்றின்கண் அமை வதூஉம், அறிவோடு கூடிய உயிர்களுக்கு இருப்பிடமான பலவகை உடம்புகளில் அமைவதூஉம், இவற்றிறெல்லாம் மேலதான அறிவின் கண் அமைவதூஉம் என மூன்றாம்.

அறிவில்லாப் பொருள்களில் அமைந்த உருவமானது அப்பொருள்கள் கலங்கலாய் நின்ற நிலையை விட்டு ஓர் ஒழுங்குபட்ட விடத்தே உளதாவதாம். வடிவு தெரியாமல் நின்ற நீராவியானது குளிரால் இறுகி நீராய் இறங்கும்போது வடிவுடையதாகின்றது. நுண்ணிய அழல் உருவா யிருந்த ஆ வியிலிருந்து இந்த நிலவுலகமும் ஞாயிற்று மண்டிலம், திங்கள் மண்டிலம் முதலியனவும் உருவாய்த் திரண்டு தோன்றிய பின்னர்த்தாம் அவை மக்களும் பல்லுயிர்களும் உயிர் வாழ்வதற்கு இடமாய்ப் பயன்படுவவாயின. இங்ஙனமே ஆவியாயிருந்த எல்லாப் பொருள்களும் உருவாய்த் திரண்டு வெளிப்பட்ட பின்னரே அவை பயன் பெரிதுடையவாதல் தேறற்பாற்று.

பல

இனி னி அறிவுடைய உயிர்கட்கு ருப்பிடமான திறப்பட்ட உடம்புகளும் ஆவி வடிவில் நின்றக்கால் உயிர் களுக்குப் பயன்படாதனவாய் இருந்தமையும்,அவை ஓர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/104&oldid=1591074" இலிருந்து மீள்விக்கப்பட்டது