இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
❖ மரணத்தின்பின் மனிதர்நிலை ❖ |
இனி இந் நிலவுலகத்தில் உயிரோடிருந்த காலத்தில் பிறர் தமக்குப் பெருந்தீங்குகள் செய்ய அவர்களைத் தண்டிக்க முடியாமல் மனவயிரத்தோடும் உயிர்விட்டவர்கள் சூக்கும சரீரத்திற் போனவுடன் மீண்டுவந்து தீமை செய்தவர்களைத் தண்டிக்கும் வரையிலே இங்குத் திரிந்துகொண்டு இருப்பர். உலகமெங்கும் பிரசித்திபெற்ற ஆங்கில மகா வித்துவானான ஷேக்ஸ்பியர் எழுதிய ஹாம்லெத் என்னும் நாடகக் காவியத்தினின்றும் ஓர் உதாரணம் எடுத்துக் காட்டுவாம்.