உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ மரணத்தின்பின் மனிதர்நிலை ❖
111

மாத்திரமே யுள்ளதென்று கூறுவாதாகா தெனவும், ஏறக்குறைய எல்லாவுயிர்களுமே சில காலத்தில் தம் ஆன்மதத்துவ அனுபவங்களைத் தம்முணர்வோடு நினைவு கூர்ந்து வருவனவாகுமெனவும் அறியப் பெறுகின்றோம். இஃது உங்களுக்கு ஆன்ம ஞானத்திற்கு உதவியாவது மாத்திரம் அன்று; இந்தப் பருவுடம்பை விட்டுச் செல்லுமாறு அல்லது எந்த மண்டிலத்திற்கேனும் உங்கள் மனஞ்செல்லும்படி அதனை உண்ர்வோடு செலுத்துமாறு உள்ளத்தை ஒருவழி வைக்கப் பழகினால் இந்த நிலவுலகத்திலேயுங்கூட உங்களுக்கு நேரில் இல்லாமற் பல்லாயிரமைல் தூரத்திற்கு அப்பால் உடம்போடு கூடியோ அல்லது அதனோடு கூடாமலோ இருக்கும் உங்கள் நண்பர்களுடன் கலந்துபேசுதற்குந் திறமை வாய்க்கப் பெறுவீர்கள்.

என்று இதுகாறும் போந்த மாக்லௌட் கிரேக் என்பவரின் உண்மையனுபவ உபந்நியாசத்தால் ஒளியா காயத்தின் இயல்புகளும் ஆண்டு நிகழும் நிகழ்ச்சிகளும் இவ்வுடம்பிலிருந்தபடியே அதிற் செல்லுமாறும் பிறவும் இனிது விளங்குதல் காண்க. இன்னும் அகக்கண் திறக்கப் பட்டு அவ்வொளி யாகாயத்திலுள்ள உலகங்களைக் கண்டவர்கள் பின்வருமாறு அவற்றை வருணித்துச் சொல்லி யிருக்கிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/144&oldid=1623839" இலிருந்து மீள்விக்கப்பட்டது