உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

6. தொல்காப்பியர் இன்பமே முதலென்றது

னி, உறுதிப்பொருள்களுள் இன்பமே முதன்மை யானதென்று தொல்காப்பியனார் கூறவில்லை என்று அம்மறுப்புரைக்காரர் துணிந்து சொல்லுதலை உற்றாராயுங் கால் அவர் செந்தமிழ் மொழிக்கு நந்தா மணிவிளக்காந் தொல்காப்பியத்தை ஒரு சிறிதாயினும் நல்லாசிரியரையடுத்து நன்கு ஆராய்ந்து பயின்றவரல்ல ரென்பது புலனாகா நிற்கும். ஆசிரியர் தொல்காப்பியனாரே பொருளதிகாரத்துப் பொருளியலில் இருபத்தொன்பதாஞ் சூத்திரமாக நிறுத்திய,

66

'எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது தானமர்ந்து வரூஉம் மேவற் றாகும்"

என்பது இன்பத்தையே ஏனைப் பொருள் அறங்களினும் முதன்மைபெற்றதாக வைத்துக் கூறாநிற்கவும் அதனை அறியாது கூறிய அவருரையே அவர் தொல்காப்பியம் உணராமையினை நன்கெடுத்துக்காட்டா நிற்கின்றது. அச் சூத்திரத்துக்குப் போந்த "மேவற்றாகுமென்றார்” என்பது ஆணும் பெண்ணுமாய்ப் போக நுகர்ந்து வருதலின் ஒருவனும் ஒருத்தியுமே இன்ப நுகர்ந்தாரெனப்படாது, அவ்வின்பம் எல்லா உயிர்க்கும் பொது வென்பதூஉம் அவை இருபாலாய்ப் புணர்ச்சி நிகழுமென்ப தூஉங் கூறியதாயிற்று. அறனும் பொருளும் எல்லா உயிர்க்கும் நிகழா, மக்கட்கே சிறந்துவரு மென்றாராயிற்று” என்னும் பழைய உரையாசிரியர் உரைப்பகுதியையேனும் அவர் உணர்ந்திருந்தனராயின், எல்லா உயிர்க்கும் இன்பம் ஒன்றுமே உரித்தாவதென்பதூஉம், ஏனைப் பொருளறங்கள் மக்கள் பால் மட்டும் உண்டாவனவாய இன்பத்தையே முதலும் முடிவுமாய்க் கொண்டு நிகழுமென்பதூஉம், அதுபற்றியே தொல்காப்பியனார் இன்பத்தை முன்னும் பொருளறங்களை அதன்பின்னுமாக வைத்துக் கூறினாரல்லது ஒரு காரணமும் பற்றாது அங்ஙனங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/121&oldid=1592293" இலிருந்து மீள்விக்கப்பட்டது