உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

11. அன்பும் இன்பத்தையே நுதலும்

இனி, இன்பமே முதலென்பதற்குத் திருவள்ளுவர் அருளிச்செய்த “அன்பு மறனும் உடைத்தாயின்” என்னுந் திருக்குறளை யாம் எடுத்துக்காட்டியது பொருத்தமில்லை என்றும், அஃது அன்புக்கே முதன்மை சொல்லுகின்றதென்றும் மறுப்புரைக்காரர் கூறியதனைச் சிறிது ஆராய்வாம். கணவனும் மனைவியும் ஒருவரோ டொருவர் அன்பு பூண்டொழுகுதல் எதனால் என்று உலகியலறிவு சிறிதுடையாரை வினாவினும், அவர் அவர்க்கு விடைதருவர். தாம் நுகருங் காதலின்பத்தினைக் குறிக்கொண்டே அவர் தமக்குள் அன்புடையராய் ஒழுகுதல் இனிது னிது விளங்கிக்கிடப்பவும், இது தானும் உணராது மறுப்பெழுதப் புகுந்தார்க்கு நல்லறிவு கொளுத்தும் வாயில் எது? மேலும் "மாயோன் மேய காடுறை யுலகமும்" என்னுந் தொல்காப்பிய அகத்திணை இயற்சூத்திரத்தில் உரையாசிரியர் நச்சினார்க்கினியர் “புணர்தலின்றி இல்லறம் நிகழாமையின் என்று கூறிய அரிய உரையையேனுந், திருவள்ளுவனார் இன்பத்துப் பாலிற் கூறிய

66

'ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பங் கூடி முயங்கப் பெறின்”

என்னும் அருமைத் திருக்குறளையேனும் அறிந்திருந்தனராயின் அம்மறுப்புரைக்காரர் இவ்வாறெல்லாங் கூறி இழுக்குறார். எனவே, அன்பு என்னும் முளை, காதலின்பமென்னும் வித்தினின்றும் உளதாகக் காண்டலின் இன்பங்காரணமும் அன்பு அதன் காரியமுமாய் நிற்பதாமென்றும், காதலர்க்குள் நிகழும் அன்பினைக் கூறவே அதற்கு முதலான இன்பமுந் தானே போதருமென்றும் உணர்ந்து கொள்க.

அற்றேற், கணவனும் மனைவியு மல்லாத பிறசேர்க்கை யிலும் அன்பு நிகழக் கொண்டு மாதலின், ஆண்டெல்லாங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/133&oldid=1592340" இலிருந்து மீள்விக்கப்பட்டது