இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
112
❖ 34❖ மறைமலையம் - 34
காப்புப் பருவம் அமைகின்ற முறையில் நூலாசிரியர்கள் தங்கள் மனம் விரும்பியபடி, பாட்டுடைத் தலைவர்களின் தொடர்புகளுக்கேற்பக் காப்புமுறைகளை மாற்றிப் பாடுவர். தெய்வங்களை விடுத்து அடியவர்களையும், ஆழ்வார்களையும் காவற்கடவுளாக வைத்துப் பாடும்முறை சேக்கிழார் பிள்ளைத் தமிழிலும், வைகுந்தநாதன் பிள்ளைத் தமிழிலும் காணக்கிடக்கின்றது.