இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
* பிள்ளைத்தமிழ் - சி. அன்பானந்தம்
173
கற்றவை யனைத்தையு முலகினிற் களித்திடக்
கருணையு மிகவுற்றே
கடலினைக் கடந்தெழில் வளந்திக ழீழமுங்
கனிவுடன் சென்றவனே
கொற்றவ னாய்த்தமிழ் குலவிடு முளங்களில் கொலுவீ றிருந்தரசு
குணமுறச் செலுத்திநல் லுறவினை வளர்த்துக் குவலயம் வென்றவனே
சுற்றமும் மணிவயிறதிற்சுமந் தளித்த
சுடர்புகழ்ப் பெற்றோரும்
சுழன்றிருந் தழைத்திடச் சிறுமலர்க் கழல்கள் தொடர்கிண் கிணியெழுப்ப
வற்றிட லறியாச் சொற்சுவைக் கடலே
வருகவே வருகவே
வளர்தமிழ்ப் புவிக்கென வள்ளுவ ராண்டினை வழங்கினை நீவருகவே.
54
அடிகள் இலங்கைப் பயணம் குறிக்கப்படுகிறது.
சென்று
வந்தமை