* பிள்ளைத்தமிழ் - இறைகுருவனார்
19
விருந்தியல் நாடகம் ஆக்கி வழங்கி விளங்கு புகழ்கொண்டோன்
விரிதமிழ் போற்றும் 'சுந்தரன் இனிதே விரும்பு கணக்காயன்
2செருந்துசூழ் நாகை 3நாரா யணனாஞ்
சீரிய பெரியோனால்
செந்தமிழ் அமுதம் ஊட்டப் பெற்றவ
திப்பிய மெய்ப்புலவ
திருந்திய பத்துப் பாட்டுறு 4பாலைத்
தெள்ளிய ஆய்வுரைநூல்
திருவுயர் அன்னோன் நினைவாய்ப் படையல்
செய்துளம் நனியுருகும்
அருந்தவ வாழ்வின் பெருந்தகை யாள
ஆடுக செங்கீரை!
அம்பல வாணன் அடிமலர் பரவி ஆடுக செங்கீரை!
குறிப்புரை :
1. சுந்தரன்
—
மனோன்மணீய ஆசிரியர் சுந்தரனார்.
243
2. செருந்து - செருந்திக்கொடி.
3. நாராயணன் - நாகை நாராயணசாமி என்பார் அடிகளாரின் இயற்றமிழ் ஆசிரியர்; மனோன்மணீயம் சுந்தரனார் இவ்வாசிரியரிடத்திலேயே யாப்பிலக்கணம் பயின்றார்.
4.
பாலை – ‘பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை' என்னும் நூலைத் தம்மாசிரியர் நினைவாக வெளியிட்டனர் அடிகளார்.