உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 4.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி

57

நுழையவிடுவராயினுந், தாம்முதன்மையாய்ப் பிடித்த ஒன்றிலே மட்டுந் தமது கருத்தை எக்காலும் நிலைபெற வைத்து, மற்றையவற்றில் அதனைச் சிறிது சிறிதே செல்லவிடுத்து மீட்டுக்கொள்வர். ஒருவர் ஓர் இனிய இசையின் ஒலியைக் காது கொடுத்துக் கேட்கப் போகுங்கால், அவரது எண்ணமானது முதன்மையாய் அவ்வோசையைக் கேட்டறிதலின்கண்ணேதான் நிலைபெற்று நிற்கும்; அங்ஙனம் நிற்குமாயினும், அதனைப் போய்க் கேட்கும் வரையில், அவ்விசை நடக்கும் இடத்திலுங் காலத்திலும், அங்கே போவதற்குரிய வழியிலும், அவ்வழியில் நடந்து செல்லுங்கால் வழியிலுள்ள பொருள்களால் தடை நேராமற் போற்றிச் செல்லுதலிலுஞ், சென்றபின் தமக்கு இசைந்த இடந்தேடி அமர்தலிலும், இத் தொழில்களைச் செய்யும்போது அவ்வத் தொழிலுக்கு ஏற்பத் தம் உறுப்புகளை இயக்குதலிலும் எல்லாம் அவர்க்கு எண்ணங்கள் பல கிளைக்குமாயினும் அவை யெல்லாம் இசை சை கேட்கும் முதன்மையான எண்ணத்தின் பிற்பட்டுப்போக, இசை கேட்கும் எண்ணம் ஒன்றுமே அவர்பால் முற்பட்டுத் தலைசிறந்து நிற்கும் . எதுபோலவெனின், ஒரு வண்டியை இழுத்துச் செல்லுங் குதிரையின் ஓட்டத்திற்கு அவ்வண்டியும் அவ்வண்டியின் உருள் முதலான உறுப்புகளும் உதவியாய்ப் பிற்பட்டு நிற்க அதன் ஓட்டமே முற்பட்டு முதன்மையாய் நிற்குமாறு போல என்க. இங்ஙனமே ஒருவர் ஓர் உணவு கொள்ளுங்கால் அவருடைய எண்ணங்கள் சோற்றிலுங் குழம்பிலுங் கறிவகைகளிலும் அவற்றை எடுத்து உண்டற் றொழிலிலுமெல்லாம் பலவாறாய் நிகழினும், முடிவில் அவர் அவ்வுணவைச் சுவைத்து இன்புறுந் துறையில் அவையெல்லாம் ஒன்றுபட்டு ஓரெண்ணமாய் நிற்றலும் நாடோறும் நாம் பழக்கத்தில் அறியக்கிடந்த தொன்றாம். ஆகவே, ஓரெண்ணத்தில் நிலைபெற்றிருப்பவர்க்கு வேறு பல எண்ணங்கள் கிளைப்பினும், அவை அவரது உள்ளத்தைக் கவரமாட்டா. அவர் கொண்ட முதன்மையான எண்ணத்தை முடிப்பதற்கே அவை உதவி செய்யும் சிற்றருவிகள் பலவுஞ் சென்று ஓர் யாற்றிற் கலத்தல் போல, அச் சிறிய எண்ணங்கள் பலவும் அவர்க்குள்ள ஒரு பேரெண்ணத்திற் சென்று அடங்கும் என்க.

L

னி, முதன்மையாக நினைவில் வைத்திருக்கும் ஓர் எண்ணத்தை வலிவு செய்ய விரும்புவாரெல்லாம், அவ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_4.pdf/90&oldid=1576042" இலிருந்து மீள்விக்கப்பட்டது