173
66
சிவமயம்
திருச்சிற்றம்பலம்.
ஸ்ரீஜ்ஞாநசம்பந்தகுருப்யோநம:
9.திருவருளியல்புகூறி நெஞ்சறிவுறுத்தல்
'தன்றோ ணான்கி னொன்று கைம் மிகூஉங்
களிறுவளர் பெருங்கா டாயினு
மொளிபெரிது சிறந்தன் றளியவென் னெஞ்சே”
வளிகுலாம் வெளியிலெளிதெனக் கறங்கும் விளம்பழ நிகர்தவிவ் வளம்பொலி ஞாலத்து வேறுவேறு குழீஇய வெறும்பினம்போல வரிதுமுயன் றூக்குந் தெரிவுறு மாந்தரில் விழியிதழ் முகிழ்ப்பிற் கழாய்பல வுருட்டுங் கைவல் லொருவன் போல மெய்பெற வெப்பெரும் புவனமு மெண்ணிலா வுயிரு மப்பெரும் பரிசா லமைந்தாங் கியங்கப் பேதுற லின்றி மாதுட னமர்ந்த வண்ணலார் திருவரு ணண்ணுவழி யறிந்து தருக்குற லின்றி யிருக்குநர் சிலரே, எம்முடை யறிவாற் செம்மைபெரி துறுவே மெம்முடை யறிவா னலம்பல பெறுவே
மெம்முடை யறிவினுஞ் சிறந்ததீண் டுண்டுகொ லியாமே யெமக்கீங் குறுதுணை யென்னா
வெறும்பல மொழிந்து கழியுநர் பலரே, ஈங்ஙன மொழியாத விளையோ னொருவன் கருமாண் குஞ்சியன் றிருவிய னோக்கின னருமைசால் குணத்தின னொருவழிப் புகழின்றி
யொருவா றிருந்து மருவுமோர் குடியி
லொருதனித் தோன்றிய மரபினன் றிருவரு
டுணைநின் றுய்க்கும் பெற்றி யல்லது
பிறிதுதுணை யில்லாச் செறிவுபெரி துடையோ
னகன்கண் ஞாலத் தியாருமி லொருசிறை