உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294

மறைமலையம் -8

காண்டு விசும்பு நோக்கி நிற்ப, அவர் உள்ளம் அவர் வயப்படாமல் காடுங்கரையும் அலைந்து திரியும்; அல்லாதவர் இறைவன்மாட்டு மெய்யன்புடையராயின் அவருள்ளந் தன்கண் அவ்விறைவற்கு ஓருருவத்தை எழுப்பி அவரறிவினை அதன்கட் பதித்துவிடும். கண்ணறிவிற்குப் புலனாம் வடிவத்தை வழிபடுதற்கு அவர் உடம்படுகில ராயினும், உள்ள வறிவின்கட் கோசரிக்கும் ஓருருவத்தை அவர் யாங்ஙனம் நீக்கவல்லார்? உள்ள வறிவின்கண்ணும் அவ்வுருவங் கோசரியாமல் நீக்கி வழிபட வல்லே மென்பாராயின், அவர் செய்யும் அவ்வழிபாடு தம் பெண்டிரை நோக்கிச் செய்யும்வழிபாடாம், தம் புதல்வரை நோக்கிச் செய்யும் வழிபாடாம், தம் நண்பரை நோக்கிச் செய்யும் வழிபாடாம், மற்றுஞ் சிலரை நோக்கிச் செய்யும் வழிபாடாம்; அவர் அங்ஙனஞ் செய்யும் வழிபாடு இறைவனை நோக்கிச் செய்ததாகமாட்டாது. ஆன்மாக்களின் உள்ளவறிவு சார்ந்த பொருளின் வண்ணமாய் வீறி விளங்குதலன்றி, தான் அவற்றின் வேறாய்ப்பிரிந்து விளங்கு மியல்பினதன்று. மனோதத்துவ' நூற்புலமை கைவந்தோரும் உள்ளத்தி னியற்கை அவ்வாறாதல் இனிது விளங்க விரித்துக் காட்டுவர்.

ஐம்பொறிகளுக்குப் புலனாகாத பொருள் மனத்தின்கட் புலப்படுமாறில்லை. கட்புலனாய் விளங்கும் ஓருருவத்தைப் பற்றி நின்று தியானஞ் செய்யா தொழியின், அம்மனம் வேறு பிறவுருவங்களைப் பற்றிக்கொண்டு அவர்க்குத் தியானவுணர்வு சல்ல வொட்டாமல் தடைசெய்வது ஒரு

தலை.

ப்பெற்றியெல்லாம் மேலே விரித்துக்காட்டினாம். பின்னும் விரிப்பிற் பெருகு மாதலின் இத்துணையினமைகின்றாம். ஈண்டுக்காட்டிய வாற்றால் ஈசுரனை உருவத்திருமேனியிற் கொண்டு உபாசிக்கு முறையேதான் அறிவின் நுட்பத்திற்கும், மக்கள் மனவியற் கைக்கும் மிக வியைந்ததாமென்பது பெறப்படுதலின், அருவமாக ஈசுரனை உபாசிக்கற்பாற்றென்று வாளாது தருக்கிப்பார் போலிவாதங்கள் பொருட்பேறிலவா யொழியுமென்றுணர்க.

ஒருசாரார்

இனிப் பிரமசமாசத்தாரில் ஆரிய வேதோபநிடத நூல்களைப் பிரமாணமாகக்கொண்டு ஆண்டு விக்கிரகாராதனை பெறப்படாமையின் அந்நூற்பிரமாண வழிநின் றொழுகுவார்க்கு விக்கிரகாராதனை செய்தன் முறை யாகாதென்று கூறுகின்றார். உலகியற் பொருள்களில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/319&oldid=1574745" இலிருந்து மீள்விக்கப்பட்டது