144
மறைமலையம் – 9
25. முக்காற் சிறுதேர் முன்வழி விலங்கும்? விலங்குபகை யல்லது கலங்குபகை யறியாக் கொழும்பல்குடிச் செழும்பாக்கத்துக்
குறும்பல்லூர் நெடுஞ்சோணாட்டு
வெள்ளை யுப்பின் கொள்ளை சாற்றி
30. நெல்லொடு வந்த வல்வாய்ப் பஃறி
பணைநிலைப் புரவியினணைமுதற் பிணிக்குங் கழிசூழ்படப்பைக் கலியாணர்ப்
பொழிற்புறவிற் பூந்தண்டலை
மழைநீங்கிய மாவிசும்பின்
35. மதிசேர்ந்த மகவெண்மீ
னுருகெழுதிற லுயர்கோட்டத்து முருகமர்பூ முரண்கிடக்கை வரியணிசுடர் வான்பொய்கை யிருகாமத் திணையேரிப்
40. புலிப்பொறிப் போர்க்கதவிற் றிருத்துஞ்சுந் திண்காப்பிற்
புகழ்நிலைஇய மொழிவளர வறநிலைஇய வகனட்டிற்
சோறுவாக்கிய கொழுஞ்கஞ்சி
45. யாறுபோலப் பரந்தொழுகி யேறுபொரச் சேறாகித் தேரோடத் துகள்கெழுமி நீறாடிய களிறுபோல
வேறுபட்ட வினையோ வத்து
50. வெண்கோயின் மாசூட்டுந்
தண்கேணித் தகைமுற்றத்துப்
பகட்டெருத்தின் பல்சாலைத் தவப்பள்ளித் தாழ்காவி
னவிர்சடை முனிவ ரங்கி வேட்கு