உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11

மூன்றாம் பதிப்பின் முகவுரை

முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை பெருகு வளமதுரைக் காஞ்சி - மருவினிய கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப் பாலை கடாத்தொடும் பத்து'

தன்

என்னும் பழைய பாட்டின்கட் கண்ட திருமுருகாற்றுப்படை முதல் மலைபடுகடாம் ஈறான அருந்தமிழ்ப் பாட்டுகள் பத்தினுள் ஐந்தாவதாய் நிற்பது முல்லைப்பாட்டாகும். ஆருயிர்க்கணவனைப் பிரிந்து வருந்தியிருந்த தலைவியின் நிலைமையும், பகையரசர் மேற்போர்புரியச் சென்ற அவள் காழுநன் கார்காலத் துவக்கத்தே அப் போர்வினையை முடித்துத் தன் மனைவிபாற் றிரும்பிவரும் வகைமையும் இச் செய்யுளின்கண் மிகவும் அழகாக எடுத்துச் சொல்லப் படுகின்றன. இச் செய்யுள் இயற்றப்பட்டுச் சிறிதேறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகள் ஆகின்றன. இதனை இயற்றிய

சிரியர்; காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வாணிகனார் மகனார் நப்பூதனார் என்று சொல்லப்படுவர். இப் பாட்டைத்தவிர இவ்வாசிரியரால் இயற்றப்பட்டனவாக வேறு எவையும் இதுவரையும் வெளிப்பட வில்லை.

கற்போருணர்வைக் கவருந் திறத்ததாய், அழகிய இயற்கைப் பொருள் நிலைகளை இருந்தவாறே எடுத்து மொழிவதாய், நூற்று மூன்றடிகளிற் சுருங்கிய பாவாய் இருப்பினுந் தமிழ்மொழியின் நலங்களை விளக்கமாகத் தேற்றுவதாய் உள்ள இம் முல்லைப் பாட்டு கி.பி.1903 ஆம் ஆண்டு கலைநூற் புலமைக்குப் பயிலும் மாணாக்கர்க்குப் பாடமாக வந்தது. சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் அப்போது யாம் தமிழாசிரியராய் இருந்து மாணாக்கர்க்குத் தமிழ்நூல் அறிவுறுத்தி வந்தமையால், முல்லைப் பாட்டிற்கும் உரைவிரித்து உரைக்கலானேம்.

ம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/44&oldid=1578891" இலிருந்து மீள்விக்கப்பட்டது