உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

மறைமலையம் - 9

ச்செய்யுட்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரையையுங் கூடவே விளக்கி வருகையிற், செய்யுளியற்றிய ஆசிரியர் கொண்ட பொருண்முறை ஒரு பக்கமாகவும், உரைகாரர் கொண்ட பொருண்முறை மற்றொரு பக்கமாகவும் ஒன்றோடொன்று ணங்காதாய் மாறுபட்டு நிற்றல் கண்டு மாணாக்கர் பெரிதும் டர்ப்படுவாராயினர். அதுவேயுமன்றி, ஆக்கியோன் அமைத்த சொற்றொடர் நெறியைச் சிதைத்துச்சொற்களையும் அடைமொழி களையும் ஒரு முறையுமின்றிப் பிரித்துக்கூட்டிப் பொருளுரைக்கும் நச்சினார்க்கினியருரை சிறிதும் ஏலாவுரையேயாமென்றும் அவர் கருதுவாராயினர். முன்னரே ஆக்கியோன் கருத்தையொட்டி வேறோர் உரைசெய்து வைத்திருந்த யாம் அதனையெடுத்து அவர்க்கு விளக்கிக்காட்டினேமாக, அது கண்டு அவரெல்லாந் 'தமதுரை ஆக்கியோன் கருதிய பொருளை நேர்நின்று விளக்குவதொடு, பண்டைக்காலத்துத் தண்டமிழ்ச் சிறப்புகளைப் பின்றைக் காலத்துக்கேற்றபடி தெற்றென நன்கு தெரிப்பதாயும் இருத்தலின் தமது விரிந்த இவ் வாராய்ச்சியுரையினையே பதிப்பிட்டு எமக்குத் தந்தருளல் வேண்டும்' எனக் கேட்டு அது பதிப்பிடுதற்காஞ் செலவும் ஒருங்கு சேர்ந்து முன் உதவினர். அங்ஙனம் உதவிய அம் மாணாக்கர்க்கு யாம் என்றும் நன்றிசெலுத்தக் கடமைப் பட்டிருக்கின்றேம்.

உடனே யாம் எழுதிய முல்லைப்பாட்டாராய்ச்சியுரை அச்சிற் பதிப்பிக்கப்பட்டமையின், அதன் அச்சுப் புத்தகங்கள் அவ்வாண்டின் மாணாக்கர்க்கும் பிறர்க்கும் வழங்கப்பட்டன. அவ்வுரை நூலை வாங்கிக் கற்ற மாணாக்கரும், ஏனைத் தமிழறிஞரும் புதுமுறையாக எழுதப்பட்ட அவ்வுரைப் பாங்கினைப் பெரிதும் வியந்து பாராட்டி, அம்முறையினைப் பின்பற்றிப் பழைய தமிழ் நூல்களை ஆராய்வதிற் கிளர்ச்சி பெறலானார். இப்புது முறையுரை தமிழ் நூலாராயும் வகைகளை இனிது விளக்கி அறிஞர் பலர்க்கும் அக மகிழ்ச்சியினை விளைத்தமை கண்டு, இனி இத்தகைய உரைகளையே எழுதுதல் வேண்டுமென எமதுள்ளம் பெரிதும் விழைந்தது.

கி.பி. 1906 ஆம் ஆண்டு கலைநூற் புலமைக்குப் பயிலும் மாணாக்கர்க்குப் பத்துப்பாட்டுக்களில் ஒன்றான பட்டினப் பாலை என்னும் அருந்தமிழ்ச் செய்யுள் பாடமாய் வந்தது. யாம் முல்லைப்பாட்டிற் கெழுதிய ஆராய்ச்சியுரை யினைப்பற்றிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/45&oldid=1578892" இலிருந்து மீள்விக்கப்பட்டது