உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

மறைமலையம் – 9

இக்குற்றமெல்லாம் அணுகாமல், இணங்கப் பொருத்துமிடந்தான் யாதோவெனிற் கூறுதும்: எடுத்துச் சொல்லப்படும் முதன்மைப் பொருள் முற்றும் முடிவுபெறாமற் காற்பங்கோ அல்லது அரைப்பங்கோ சிறிது கருக்கொண்டு ஓரிடத்திற் கூடிநின்று, கற்பார்க்கு ‘இனி இஃது எங்ஙனம் முடியும்! எங்ஙனம் முடியும்! என்று முடிவு அறியும் விருப்பத்தினை எழுப்புவித்து, அவர் அதனை முழுதுங்கற்றுத் துறைபோகும் வண்ணம் அப்பொருள் இடையறுந்து நிற்கும் இடமே, பிறபொருளை இணைப்பதற்கு சைவான இடுக்கு வெளியாம் என்க.

இப்

பாட்டின்கண்

முல்லைப்பொருள்

இவ்வாறு இடையறுந்து நிற்கும் இடுக்குவெளி யாதோவெனிற் கூறுதும்: தலைமகன் கூறிய கார்காலம் வருதலை உணர்ந்து ஆற்றாமல் அழுது வருந்தும் நங்கைக்கு நற்சொற்கேட்டு வந்த பெருமுது பெண்டிர், “நாங்களும் படைத்தலைவருங் கேட்ட நற்சொல்லால் நின் காதலன் தான் எடுத்துப் போன போர் வினையை விரைவில் முடித்துத் திரும்பி நின்னுடன் வந்து சேர்வன்;அவன் வரும் வரையில் நீ ஆற்றிக்கொண்டு இருத்தல் வேண்டும்” என்று பலகாலுஞ் சொல்லி வற்புறுத்தவும், அவள் அவர் சொற்களைக் கேளாளாய், மை தீட்டிய பூப்போன்ற கண்ணினின்றும் நீர் முத்துப்போல் துளித்துளியாய் விழக் கலுழ்ந்து வருந்தினாள் என 23 ஆவது வரியில் முல்லைப்பொருள் முற்றும் முடிவுபெறாமல் இடையறுந்து நிற்பது காண்க. இப் பாட்டினைக் கற்போர் இவ்வளவில் தாங் கற்பதை நிறுத்திவிடாமல், இங்ஙனம் வருந்திய அப் பெண்மணி பின் எவ்வாறு ஆயினாள் எனப் பின்னும் அறிவதற்கு மிக விழைகுவர்; இங்ஙனம் அவர் முடிவறியும் விழைவால் மேலுங் கற்பதற்கு மனவெழுச்சி மிகுந்து நிற்கும் பொழுது பிறபொருள் இடையே இணைத்துச் சொல்லப்படு மாயினும் அதனால் அவர் தாம் சிறிதும் இளைப்படையாது,அவ் விடைப்பட்டபொருளையுங் கற்று மேற்சென்று பொருள் முடிவு காண்பரென்பது தெற்றென விளங்கும். ஆகவே, இங்ஙனம் முல்லைப்பொருள் இடையறுந்து நிற்கும் இடங்கண்டு அங்கே முல்லைப் பொருளைமறித்து, அதனோடு இயைபுடைய வஞ்சிப் பொருளைக் கொணர்ந்து நுழைத்துப், பின் மறிக்கப்பட்ட முல்லைப் பொருளை 80 ஆவது வரியிலே "இன் துயில் வதியுநற்காணாள் துயர் உழந்து” என்பதுடன் கொண்டுபோய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/73&oldid=1578921" இலிருந்து மீள்விக்கப்பட்டது