பக்கம்:மலடி பெற்ற பிள்ளை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒருவன் காபி கொண்டு வந்து கொடுத்தான். சுபத்ரா அதைத் தொட்டுக்கூடப் பார்க்கவில்லை. இன்னொருவன் சிப்பும், கண்ணுடியும் கொண்டு வந்து வைத்தான். சுபத்ரா அந்தத் திசைப்பக்கமே திரும்பவில்லை. அது, அந்த மாளிகைக்கே உரிய ஒரு பல்லுப் போன சீப்பு; சில்லுப்போன ஒரு கண்ணுடி! கொஞ்ச நேரத்திற்குள்ளாக சுபத்ராவைக் க ட த் தி க் கொண்டு வந்த கார் புறப்பட்டு விட்டது. அப்போது சுபத்ரா வின் மனத்தில், இந்த ரா சா க் கி வரி ராவுத்தரைவிட தன்னைக் கடத்தி வந்தவர்கள் பரவாயில்லை போல் தோன்றியது வெயிலில் நடந்து களத்த அவள் மனதுக்கு பனைமரத்து நிழல் கூட ஆலமரத்து நிழலாகத் தெரிகிறது. - ராசாக்கிளி ராவுத்தர் புதுக்கோட்டையை சேர்ந்தவர். இருபத்தைந்து வருஷங்களுக்கு முன்பு அதாவது விபச்சாரத் தடைச்சட்டம் அமுலானதும் பிழைப்பிற்காக திருநெல்வேலிக் குக் குடியேறினர். அங்கே தொடங்கிய தொழில்தான் இது! புதுக்கோட்டையிலிருந்து போகும் போதே நான்கு குமரிப் பெண்களே உடன் அழைத்துப் போய்விட்டார். அதிக மூலதனம் போட்டு நாணயமாக நடத்தும் வியாபாரத்தை விட இ. தி ல் அபரிமித லாபம் கிடைப்பதை ராசாக்கிளி தெளிவாக உணர்ந்து கொண்டார். - பத்து வருஷங்களுக்குள்ளாக ராசாக்கிளி திருநெல்வேலி யில் ஒரு செல்வந்தராகி விட்டார். பணக்காரர்களை மதித்துப் பழக்கப்பட்ட பாமரர்கள், ராசாக்கிளியை மட்டும் எப்படிப் புறக்கணிக்க முடியும் அவர் நடந்து வந்தால் எழுந்து நிற்பது, அவர் பேச்சைத் தட்டாமல் கேட்டு நடப்பது என்பதெல்லாம் அந்தத் தெருவுக்கே கைவந்த கலையாகி விட்டது. எதிர்த்துப் பேசில்ை எந்த அதிகாரியிடமாவது பிடித்துக் கொடுத்து விடு வார்; பிற கு அவரே போய் மீட்டுக்கொண்டு வருவதாக பாசாங்கு செய்வார்; எப்படியோ ராசாக்கிளி திருநெல்வேலி யில் ஒரு பாப்புலர் மனிதராகி விட்டார். படிக்காதவர்கள் சில நேரங்களில் சிந்தனையாளர்களைப் போல் பதில் சொல்லிவிடுகிருர்கள். ராசாக்கிளி தொழில் 48