பக்கம்:மலடி பெற்ற பிள்ளை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'இரண்டாயிரத்திற்குக் குறையக் கூடாது. க ட் அண் ட் ரைட்டாப் பேசிடணும். முந்தி ஒருத்தியைக் கொடுத்தோம். நானூறு ரூபாய் தான் கொடுத்தான். ஆல்ை அவன் இரண்டே நாளிலே அந்தத்தொகையை எடுத்துட்டான். அந்த பாய் இருக் கானே அவன் ஒரு மலை விழுங்கி! பத்து வருஷமா நாம் இப்ப டியே தான் இருக்கோம். அவன் லாரி வாங்கிட்டான். வீடுகட் டிட்டான். திருநெல்வேலியிலே இன்னக்கி அவன் பெரிய புள்ளி யாம். நகரசபைத் தேர்தலுக்கும் நிக்கப் போருளும். பாய், கொடுத்து வச்சவன்; இன்னக்கி ஒரு கைபடாத ரோஜா கிடைக் கும்னு அவன் சொப்பனம் கூடக் கண்டிருக்க மாட்டான்.” இந்தப் பேச்சு சுபத்ராவுக்கு மதிமயக்கத்தை அதிகரிக்கச் செய்து விட்டது. அவள் நினேவை இழந்தாள். பொழுது புலர்வதற்குள் டாக்சி திருநெல்வேலி வந்து விட் டது. கிழக்கு வெளுக்கப்போகும் நேரம். டாக்சி, நகரில் பல தெருக்களேத் தாண்டி இடுக்கும், முடுக்கும் நிறைந்த ஒரு பகுதிக் குள் வந்து விட்டது. - வாழ்க! ஆகா, பிரமாதம்' என்று வரவேற்புக் கொடுத் தான் ராசாக்கிளி ராவுத்தர். குடித்தவனைப் போல் ப்ேசினன். ஆனல் அவன் குடிக்கமாட்டான். அப்படி அவனுக்கு ஒரு பேச் சுப் பழக்கம். х * , ராசாக்கிளி ஒரு விநோத மான தோற்றமுடையவன். ஒரு அழுக்குப்பிடித்த கைலி, மேலே ஒரு முண்டா பனியன்; இடுப்பிலே பச்சை பெல்ட் டக்டக் என்று பயங்கரமான ஒசை தரும் பூட்'சுகள் காலில்; இளம் தாடி, ஆளுல் மீசை இல்லை. பெண் குரலுக்கு எதிரான எருமைக் குரல். சிங்கத்தை அடக்கும் சர்க்கஸ்காரனைப் போல் நடவடிக்கைகள். . . . . ; - சுபத்ராவைப் பார்த்ததும், நன்ருகப் பழக்கமான பெண் ணுடன் பேசுவதைப்போல் அவளே கனிவோடு உள்ளே அழைத் துக் சொண்டு போனன். லாயத்திற்குள் நுழைய இட்க்கு செய் யும் புதிய குதிரையைப் போல் சுபத்ரா திமிறிள்ை. இரவெல் லாம் அழுது அழுது அவள் கண்கள் பாழடைந்து கிடந்தன. மழைபெய்து ஓய்ந்த ஏரிக்கரையைப்போல அவள் கன்னங்களில் கறைக்கோடுகள் காய்ந்து தெரிந்தன. . r 47