பக்கம்:மலடி பெற்ற பிள்ளை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போதும்!” அந்த உரையாடல் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள் சுபத்ரா, இரண்டு போலீஸ்காரர்கள் அவளருகே வந்து கொண்டிருந் தார்கள். - 'ஏய், யார் நீ?" என்றன் ஒருவன். "எங்கே புறப்பட்டே சொகுசா?’ என்ருன் அடுத்தவன். பெரிய ஸ் டார் மாதிரியில்லை கெளம்பிட்டா, டிக்கட் போடுறவ போலேருக்கு' போலீசாரின் பேச்சு அத்துமீறியது. 'பிராத்தல் கேசப்பா இது! பட்டணத்துக்கு ஏற்றுமதி யாகுது! ம்...! கிளம்பு ஸ்டேஷனுக்கு!’ என்று ஒருவன் மிரட்ட, அடுத்தவன் லத்தியை வைத்து சுபத்ராவைத் தள்ள- அவள் எப்படியோ ஒரு டாக்சியில் ஏற்றப்பட்டாள். - அழகு சில பெண்களுக்கு வாழ்வின் சூரியோதயமாக அமை கிறது; வேறு சிலருக்கு வாழ்வின் அஸ்தமனமாக ஆகிவிடுகிறது. 'இப்ப எங்கே போகணும்? டாக்சிக்காரன் கேட்டான். போய்க்கொண்டே இரு! இப்ப நீ எந்தப் பாதையில் போகிருய்? - ! . . : நாகர்கோயில் பாதை இது!’ ரொம்பச்சரி: சுபத்ராதிக்குளித்தவளைப்போல் காருக்குள் சுருண்டு கிடந் தாள். மயக்கம் அவளேப் புரட்டிப் புரட்டிப் போட்டது. 'மூன்று வருஷத்துக்கிடையிலே இப்படி ஒரு உருப் படி கெடைச்சதே இல்லை. இன்று நமக்கு நல்ல லக்கு!” சுபத்ராதிகைத் தாள். இவர்கள் உண்மையான போலீஸ் காரர்கள் இல்லையென்று அப்போதுதான் அவளுக்குப் புரிந்தது. 46