பக்கம்:மலடி பெற்ற பிள்ளை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாகக் கக்கிக் கொண்டிருந்தன. சுபத்ராவிற்காக வாங்கி வந்த ஒரு பந்து மல்லிகைப்பூ மேஜையில் சீண்டுவாரற்றுக் கிடந்தது. வெள்ளிக் கூ ஜா வி ல் நயம் பசும்பாலும், அதனருகே இரு ஆப்பிள் பழங்களும் காத்திருந்தன. ராவுத்தர், காசியப்பரை மரியாதையுடன் உள் ேள அழைத்து வந்தார். ‘சுபத்ரா; நானும் போகுது போகுதுனு பார்க்கிறேன். நீயோ உச்சாணிக் கொம்பிலே ஏறிக்கிட்டே போறே! உன்னை விட ராணிகளையெல்லாம் பாத்தவரு.இவரு! எங்க முதலாளி கிட்டே இன்னுக்கி நீ முறையா நடந்துக்கல்லையின என் சுய ரூபத்தைக் காட்டித்தான் ஆகணும்! என்னிடத்திலே மாட்டை விரட்டும் தாருக்கம்பு, குதிரையோட்டும் நீளச்சவுக்கு, மனுசன வதைக்கிற திருக்கைவாரு - எல்லாமே இரு க்கு து!’ என்று தனது கொடிய குரலால் நெருப்பைப் பொழிந்து விட்டு ராசாக் கிளி கிடுகிடுவென்று இறங்கிப் போய் விட்டார். கதவுகள் சாத்தப்பட்டன. மல்லிகைப்பூவின் நறுமணமும் ஊதுபத்திகளின் வாசனைப்புகையும் வெளியேற வழியில்லாமல் ஆலிங்கனம் செய்து கொண்டன. ஆனல் காசியப்பரும் சுபத்ரா வும் ஒருவரை ஒருவர் தீண்டாமல் சண்டைக்காரர்களைப் போல பிரிந்தே உட்கார்ந்திருந்தார்கள். நேரம் செல்லச் செல்ல காசியப்பருக்கு வியர்வை கொட்டத் தொடங்கியது. ஜவ்வாது கரைந்து ஒழுகியது. மனிதன் சாப்பிடுவதற்கே பசி என்ற உணர்ச்சி தேவைப் படும் போது சுகபோகங்களுக்கு மட்டும் அ ப் படி ப் ப ட் ட உணர்ச்சி தேவைபடாமல் போகுமா? அதேைலயே காசியப்பர். மிருகத்தனமாக நடந்து கொள்ளவில்லை. அவர் அச்சம் கலந்த உணர்ச்சியில். சுதந்திரமில்லாத உணர்ச்சியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தார். அவர் உள்ளம் என்றும் இல்லாத அளவுக்குப் படபடத்தது. 'உன் பெயரையாவது உன் வாயால் சொல்லேன்; உன் குரலாவது எனக்கு இன்பமூட்டட்டும்.” 50