பக்கம்:மலடி பெற்ற பிள்ளை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு காலத்தில் ரங்கோன் மொகல் ரோட்டில் மூன்றடுக்கு மாளிகையில் வாழ்ந்தவர்கள் இன்று கோயிலூரில் அதே கல் மண்டபத்தில், மேல்துண்டைச் சுற்றித் தலையணையாக்கி வைத் துக்கொண்டு துரங்கிக்கொண்டிருந்தார்கள். இதைவிட கோயிலூருக்கு இன்னொரு துர்பாக்கியம் ஏற் பட்டு விட்டது. செல்வ நிலையை யொட்டி அந்தக் கிராமம் செயற்கையாக இரண்டு பகுதிகளாகப் பிரிந்து விட்டன. ஒரு பகுதியில் சிங்கப்பூர் கடைக்காரர்கள் புதிய வீடுகளிலும் அடுத்த பகுதியில் பர்மாக் கடைக்காரர்கள் அவர்களது பூர்வீக வீடுகளி லும் வாழ்ந்து வந்தார்கள். இதல்ை வெளியூர் வியாபாரிகள் யாரும் பர்மாக் கடைக்காரர்கள் இருக்கும் பழைய வலவிற்கு வருவதில்லை. காய்கறிக்காரன், மளிகைக் கடைக்காரன், உப்பு வண்டிக்காரன் உட்பட எல்லோருமே புதிய வலவிற்குத்தான் போய் வந்து கொண்டிருந்தார்கள். பழைய வலவிலே இருந்த பர்மாக் கடைக்காரர்களுக்கு எதுவுமே கிடைப்பதில்லை. வாழ்க்கையில் என்னதான் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டா லும் உறவும், உரிமையும் அழிந்துபோய் விடுமா? தாய்மாமன், சகோதரி, சம்பந்தி எ ன் ற உறவு முறை அற்றுப்போய்விடா தல்லவா? ரத்தபாசம் என்பது சமையலறையில் பிடித்த கரி மாதிரி எத்தனமுறை சுண்ணும்படித்தாலும் சுவரில் படிந்து போயிருக்கும் புகைக்கரியை மாற்றவே முடியாது! தமிழ் ஆராய்ச்சியில் கற்றுத் தேர்ந்த கண்ணப்பனுக்கு இது தெளிவாகத் தெரிந்த ஒன்று. பர்மாவின் வீழ்ச்சியினல் அவனது மாமனர் வீடு மிகவும் நொடித்துப் போய்க்கிடந்தது. கண்ணப் பன் திருமணத்தின்போது அவன் மாமனர் வீடு இருந்த நிலை வேறு, இப்போதிருக்கும் நிலை வேறு. நாலு முகப்பு நாராயணன் செட்டியார் என்ற புகழ் அவன் மாமருைக்கு இருந்தது. ஆம்; நாராயணன் செட்டியார் வீட்டுக்கு நாலு தலைவாசல்கள் இருந் தனவாம்! ஐந்தாண்டு காலத்திற்குள் சரசர வென்று அவர் குடும்பம் சரிந்து வி ட் டது. அதற்காக அவர் மரியாதையை இழந்து விடவில்லை. மற்றவர்களைப்போல அவர் கோயில் கல் மண்டபத்து வாசியாகி விடவில்லை. கிராமத்திலே விளையும் நெல்லே வைத்துக் குடும்பத்தை நடத்திக் கொண்டு வந்தார். 8