உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மலரும் உள்ளம்-1.pdf

சின்னப் பாப்பா தன்னைநாம்
சேர்த்த ணைத்துத் தூக்கலாம்.
நன்கு வளர்ந்த மனிதனை
நம்மால் தூக்க முடியுமோ?

கன்றுக் குட்டி தன்னைநாம்
கட்டிப் பிடித்து நிறுத்தலாம்.
நன்கு வளர்ந்த காளையை
நம்மால் அடக்க முடியுமோ?

சின்னச் செடியை எளிதிலே
சிரம மின்றிப் பிடுங்கலாம்.
நன்கு வளர்ந்த மரத்தினை
நம்மால் அசைக்க முடியுமோ?

வளர விட்டு எதையுமே
வசப்ப டுத்தல் சிரமமே.
எளிது அல்ல! ஆதலால்,
இதனை நாமும் உணர்ந்துமே,


101