பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளவைப் பாட்டி நல்ல பாட்டி - நமக்(கு) ஆத்தி சூடி தந்த பாட்டி. செவ்வை யாக நாமெல் லோரும் - வாழச் சிறந்த வழி காட்டும் பாட்டி மன்னர் மரி யாதை செய்ய நாட்டு மக்கள் போற்றி வந்த பாட்டி. என்ன செல்வம் வந்த போதும் - அதை ஏழை கையில் தந்த பாட்டி. எந்த ஊரும் சொந்த ஊரே - என எங்கும் சுற்றி வந்த பாட்டி. சொந்த நலன் ஏதும். இன்றி - தமிழ்த் தொண்டு செய்தே வாழ்ந்த பாட்டி 12t

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/125&oldid=859922" இலிருந்து மீள்விக்கப்பட்டது