பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எலி - ஆசை காட்டி மோசம் செய்யும் அற்பப் பூனையே, அசடு நானும் அல்ல, அல்ல. அறிந்து கொள்ளுவாய். பூனை - அடடா, இதுபோல் நீயும் என்னை நினைக்க லாகுமோ? அருமை யான பண்டந் தன்னை மறுக்க லாகுமோ? எலி - இனிப்பை நானும் தின்ப தற்கோ வருந்தி அழைக்கிறாய்? இல்லை. இல்லை. என்னைப் பிடித்துத் தின்னப் பார்க்கிறாய். உலகில் உள்ள பண்டம் யாவும் கிடைப்ப தாயினும், உயிரைக் கொடுக்க உலகில் எவரும் துணிந்து வருவரோ? வளையை விட்டே உனது வயிற்றில் வந்து சேர்ந்திட - மடையனல்ல. வழியைப் பார்த்து நடையைக் கட்டுவாய்! 153

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/158&oldid=859986" இலிருந்து மீள்விக்கப்பட்டது