பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மிருக ராஜன் தலையில் ரோமம் அடர்ந்தி ருப்பதேன்? - காட்டில் வெட்டி விடவே எந்த ஆளும் இல்லை யாதலால் ஒட்டைச் சிவிங்கிக் கழுத்து மிகவும் நெட்டை யானதேன்? - அது எட்டி எட்டி இலையும் தழையும் பறித்துத் தின்றதால் வரிக் குதிரையின் உடம்பு முழுதும் கோடி ருப்பதேன்? யாரோ வலிக்க வலிக்கச் சவுக்கி னாலே அடித்த காயம்தான்! அண்டங் காக்கை அதிக மாகக் கறுத்துப் போனதேன்? - அது அடுப்புக் கரியைத் திருட்டுத் தனமாய் எடுத்துத் தின்றதால் 243

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/219&oldid=860054" இலிருந்து மீள்விக்கப்பட்டது