பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழந்தைக் கவிஞரின் படைப்பும் பணியும் பிறப்பு : புதுக்கோட்டை மாவட்டம், இராயவரம், 7-11-1922. மறைவு : 16-3-1989 பெற்றோர் . அழகப்பச் செட்டியார், உமையாள் ஆச்சி. கவிதை எழுதத் தொடங்கியது : 3 - வது வயதில். சக்தியில் பணி : 1940-ல் அமரர் வை. கோவிந்தன் அவர்களின் சக்தி அலுவலகத்தில் பொருளாளராய்ச்சேர்ந்தார். சக்தி இதழின் ஆசிரியர் தி. ஜ. ர. அவர்களின் ஆதரவால் சக்தியில் எழுதி, எழுத்தாளரானார். இந்தியன் பாங்க் பணி : 1941 - ல் இந்தியன் பாங்கில் சேர்ந்து, சென்னையிலுள்ள ஆள்வார்ப்பேட்டை, ஆயிரம் விளக்கு, ஹாரிஸ் ரோடு, காரைக்குடி ஆகிய கிளைகளில் மேலாளராகப் பணியாற்றிய பின், காரைக்குடியில் வட்டார மேலாளராகப் (Area Manager) பணியாற்றி 1982 நவம்பரில் ஒய்வு பெற்றார். புத்தகங்கள் : இதுவரை குழந்தைகளுக்காக 50 புத்தகங்களுக்கு மேல் எழுதியுள்ளார். அரசினர் பரிசுகள் : மத்திய அரசின் பரிசு பெற்றவை (1) மலரும் உள்ளம் (முதல் தொகுதி) (2) பாட்டிலே காந்தி கதை தமிழக அரசின் பரிசு பெற்றவை : (1) மலரும் உள்ளம் (முதல் தொகுதி) (2) பாப்பாவுக்குப் பாட்டு (3) நல்ல நண்பர்கள் (கதை) (4) பெரியோர் வாழ்விலே (5) சின்னஞ் சிறுவயதில் (6) பிள்ளைப் பருவத்திலே குழந்தை எழுத்தாளர் சங்க நிறுவனர் : 1950-ல் குழந்தைகளுக்காக எழுதுவோரை ஒன்ற சேர்த்து, குழந்தை எழுத்தாளர் சங்கத்தை வை. கோவிந்தன் அவர்கள் தலைமையில் நிறுவினார். தமிழில் குழந்தை இலக்கியம் தழைக்கவும், எழுத்தாளர் பலர் உருவாகவும் 225

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/231&oldid=860068" இலிருந்து மீள்விக்கப்பட்டது