பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翼。浣路 மலரும் நினைவுகள் பற்றி உசாவினேன். மிஸ்ட்ர் ரெட்டியார், இதுபற்றி எனக்கு ஒன்றுந் தெரியாது. நான் துணைவேந்தருடன் கலந்து யோசித்து அது வில்லை. தொலைபேசிமூலம் துணை வேத்தரிடமிருந்து பெற்ற செய்தியின் படி இதை அனுப் - - துணைவேந்தரைச் சந்தித்துவிவரங் களை அறிந்து கொள்ளலாம் (கடிகாரத்தைப் பார்த்து) மணி 3-40 ஆகிறது. உடனே புறப்படுங்கள். அவர் நீராடப் போய்விடுவார்,' என்று என்னை முடுக்கினார். நானும் விரைந்து (மிதிவண்டியில்தான்) துணை வேந்தரின்திருமாளிகையை அடைந்தேன். குளியலறைக்குள் துழையும் சமயம் போய்ச் சேர்ந்துவிட்டேன், என்ன மிஸ்டர் ரெட்டியார், எப்பொழும் காலை ஏழு மணிக்கு வருவீர்களே, இன்று அகாலத்தில் வந்திருக்கின்றீர்களே, ஏதாவது சிறப்புச் செய்தி உண்டா?’ என்று வினவினார். 'உண்டு, நேற்றுமாலை முதல்வரிடமிருந்து ஒரு கருத்துரு (Proposal) வந்தது. அதிர்ச்சியடைந்தேன். முதல்வரைப் பார்த்தேன். அவர் தனக்கு ஒன்றும் தெரியாதென்றும், தங்களைச் சந்தித்துத் தெரிந்து கொள்ளுமாறும் பணித் தார். அவரிடமிருந்து தான் நேராக வந்து கொண்டிருக் கின்றேன்' என்றேன். டெல்லி, ஆந்திரப்பல்கலைக் கழகங்களில் தனியாக இருக்கும் விரிவுரையாளரை ஏதாவது ஒரு பொருத்தமான துறையில் இணைப்பது வழக்கமாக உள்ளது. அதனையொட்டிதான் அப்படி இருக்கலாம்என்று கருதியே இப்படி ஒரு கருத்துரு அனுப்ப செய்தேன்' என்றார், இப்படி ஒரு நிலை எழும் யே சென்னையில் தங்கள் இல்லத்தில் என் நியமனத்திற்காக நடைபெற்ற பேட்டியில் இந்த வினாவை எழுப்பினேன். தாங்கள் தனியாகத்தான் இருப்பீர்கள்' என்றீர்கள். இப்போது நிலைமை மாறு இறது என்றேன். தொடர்ந்து நான் இங்கு வந்தது. இந்த விரிவுரையாளர் பதவியை நாடி அன்று; அதுவும் ஒரு நல்ல கல்லூரியில் பேராசிரியர் பதவியைத் துறந்து, to &” என்று கருதி