பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

荔鲁 மலரும் நினைவுகள் குலம் என்று வழங்கி வந்த குலப்பெயர்கள் இராகவ குலம், இராம குலம்’ என வழங்குமாறு செய்வித்து விடு கின்றாள். அன்றியும், அப்பெருமாட்டி தன் கற்பு நிலை கலங்காத தன்மையினால் தன்னையும் உயர்த்தித் தான் பிறந்த பெண் குலத்தையும் பெருமைப் படுத்துகின்றாள்; தான் பிறந்து வளர்ந்த ஜனக குலத்துக்கும் மேன்மையை ஈட்டுகின்றாள். இவள் பிறந்த ஜனககுலம்’ ஜானகி குலம்’ என்று வழங்குமாறு செய்துவிட்டாள். தன்னை இராமனை விட்டுப் பிரித்துச் சிறைவைத்த இராவணனது அரக்கர் குலத்தைக் கூற்றுக்கு ஈந்தாள் என்பது தன்னைக் கனவு செய்து எடுத்து வந்த இராவணனது குலம் முழுவ தும் அழித்தது என்பதை விளக்குகின்றது. இராவணனால் வெல்லப்பட்டு ஒடுங்கிக் கிடந்த தேவர் குலத்தை வாழ வைக்கின்றாள். அது மன்’ என்ற பெயர் அவன் பிறந்து வளர்ந்த குலத்தோர்க்கெல்லாம் வழங்குமாறு செய்து விட்டாள். குரங்குக் கூட்டத்தை 'அநுமார்கள்' என்று வழங்குகின்றோ மன்றோ? இப்படிப் பிராட்டியின் கற்பு நிலையைப் பலவாறு விளக்கிய பேராசிரியர் இதிகாச சிரேஷ்டமான ரீராமாயணத்தால் சிறையிருந்தவள் ஏற்றம் சொல்லுகிறது' என்ற பிள்ளை லோகாச்சாரி யாரின் திருவாக்கால் தன் உரைக்கு ஒரு முத்தாய்ப்பும் வைத்து விடுகின்றார். 1965-இல் என நினைக்கின்றேன். பேராசிரியரிட மிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் நான் எழுதி வெளி விட்ட இரண்டு நூல்களின் பெயர், வெளியிட்ட ஆண்டு. அவை துவலும் பொருள் வெளியிட்டோர் முகவரி இவை பற்றிக் குறிப்பிட்டெழுதுமாறு கேட்டிருந்தார் அவரிடம் பணியாற்றிய வைத்தமாநிதி என்பார் மூலமாக, நானும் கவிதையதுபவம்” , (1961) தொல்காப்பியம் காட்டும் Í ÉS , பூர்வசன பூஷணம்-வாக்கியம்-1 (முதல். பிரகரணம்)