பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/502

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமி பிள்ளை 全&7 கொண்டிருந்த காலத்திலேயே இந்நூலை இவருக்கு அன்புப்படையலாக்கி இவர்தம் ஆசி பெறத் துடித்தேன். பல்வேறு காரணங்களால் நூலை அச்சேற்றி வெளிக் கொணர முடியவில்லை. எனினும், இந்நூலை முத்தர் ஒளவை துரைசாமி பிள்ளையவர்கட்குப் படைத்துப் பெருமிதம் அடைகின்றேன். இவர்தம் ஆசியால் யானும் என் போன்ற அக இலக்கிய ஆய்வாளர்களும் மேலும் மேலும் அறிவு பெறுவோம் என்பது என் திடமான நம்பிக்கை, ஒருநாள் பழகினும் பெரியோர் கேண்மை இரு நிலம் பிளக்க வேர்வீழ்க் கும்மே." என்ற அதிவீரராமபாண்டியரின் திருவாக்கு என் நினைவில் மலர்கின்றது. 1. வெற்றிவேற்கை- 34,