பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§0 மலரும் நினைவுகள் என்பதைச் செய்தித்தாள்கள் வாயிலாக அறிந்தேன்; வருந்தினேன். நாளென ஒன்றுபோல் காட்டி உயிரீரும் வாளது உணர்வார்ப் பெறின் (குறள் 334) என்ற குறளைச் சிந்திக்கின்றேன். தோற்றஞ்சால் ஞாயிறு நாழியா வைகலும் கூற்றம் அளந்துதும் நாள்.உண்ணும்' என்ற சமண முனிவரின் வாக்கையும் என் மனம் அசை போடுகின்றது. அடிகளார் சிந்தாந்த முத்திப் பெற்றுச் சிவத்தோடு அத்துவிதமாய்க் கலந்து சிவனது இன்பத்தில் திளைத்திருக்கின்றார் என்பதாக என் மனம் இப்போது எண்ணுகின்றது. 4. நாலடி- 7.