பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரிய சுவாமிகள் அவர்களின் - எண்பதாவது ஆண்டு நிறைவின் மகிழ்வாக அன்புப் படையல் வடமொழிச் சுவையைத் தென்றமிழ்ப் பயனை மாநிலம் வியப்புறப் பருகித் திடமுறு ஞானக் கொண்டலாய் வளர்ந்து சேதன ரெனும்பயிர் முளைக்கக் கடலுல குவக்க மழைபொழி அண்ணங் காரவர் திருவடி மலரில் சுடர்மிகப் பெற்று வயங்குக என்றித் தூயநூல் சமர்ப்பணம் புரிந்தேன்.