பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்புலியூர் மாயப்பிரான் 151 யும் குறிப்பிடுகின்றாள். புன்னையம் பொழில் சூழ் திருப் புலியூர் புகழும் இவளே' என்பதாக, 'அணிமேருவின் மீதுலவும் துன்னு சூழ்சுடர் ஞாயிறும் அன்றியும்பல் சுடர்களும்போல் மின்னு நீள்முடி யாரம்பல்கலன் தானுடை எம் பெருமான்' (அனிமேரு அழகிய மேரு துன்னு-செறிந்து ஞாயிறு. கதிரவன்; பல்சுடர்-கோள்கள், உடுக்கள்: முடி கிரீடம்; ஆரம்பமாலை.) என்ற பாசுரப் பகுதியால் அத்திருப்பதி எம்பெருமானது திவ்விய ஆபரண அழகில் தலைவி ஈடுபட்டுப் பேசும் படி களை விரித்துரைக்கின்றாள். மேரு மலையின் மீது ஆயிரம் கதிர்கள் விரித்தாற் போன்ற திருவபிடேகமும், விண் மீன் கூட்டங்கள் மின்னினாற் போன்ற பல மாலை வரிசை களும் மற்றும் அணிவகைகளும் ஒளிரும் அழகை என்ன வென்று சொல்வது?’ என்று வாய்வெருவி நிற்கின்றாள் என்று குறிப்பிடுகின்றாள் தோழி.இவற்றாலும் சோலையைப் பற்றிக் குறிப்பிடுவதாலும் இவளுக்கு அத்தலத்து எம்பெரு மானோடு கலவி நேர்ந்ததாகவே நினைக்கத் தோன்றுகிறது என்பது தோழியின் குறிப்பு - ஆழ்வார்நாயகி இரவும் பகலும் திருப்புலியூர் வளத்தையே புகழ்ந்து கொண்டிருக்கின்றாள் என்பதை அடுத்துக் குறிப்பிடுகின்றாள் தோழி.

  • புகழும் இவள் நின் றிராப்பகல்

பொருநீர்க்கடல் தீப்பட்டு எங்கும் திகழும் எரியொடு செல்வதொப்பச் செழுங்கதிர் ஆழிமுதல் 28. திருவாய். 8, 9, 2 - 29. டிெ 8, 9, 2