பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} 54 மலைநாட்டுத் திருப்பதிகள் (புனை- பூணுதல்: புதுக்கணிப்பு-வடிவில் பிறந்த புதுமை: முனைவன்-முன்னோன்; ஆளி-ஆள்பவன்.) என்பது பாசுரம். தலைமகளிடத்துக் காணப்பெறும் மூன்று சிறப்புகளை எடுத்துக்காட்டித் தன் ஊகத்தை உறுதிப் படுத்துகின்றாள் தோழி. அவள் அணிந்திருக்கும் ஆபரணங் கள் முன்பு நாம் பூட்டினாற்போல் இல்லை; கலைத்துப் பூண்டாற்போல் தோன்றுகின்றதன்றோ?' என்கின்றாள். "உடுத்தின ஆடையும் நாம் உடுத்தினபடி இல்லை; முகத் தலைப்பார்த்து உடுத்தது போலல்லவா உளது? வேறுபாடு தோன்றவில்லையா?” என்று ஆடை யின்மீது கவனத்தை ஈர்க்கின்றாள். இவள் வடிவிலும் பிறந்திருக்கும் புதுமைகள் தோன்றவில்லையா? இதற்கு முன்பு இது கோடையோடின வயல்போலே யன்றோ இருந்தது?. இப்போது நீர்பாய்ந்த வயல் போலே தோன்றும் செவ்வியைப் பாருங்கள்’ என் கின்றாள். காலம் என்னும் ஒரு பொருள் உள்ள வரையிலும் நின்று ஆராயப் புகுந்தாலும், இவளிடம் பிறந்துள்ள அழகுகள் நினைத்துக்கூடப் பார்க்க முடியாதவை என்பதை யும் உணர்த்துகின்றாள். எம்பெருமானுடைய படிகளையே நினைக்க முடியாதபோது அவன் திறத்தில் ஈடுபட்டா ருடைய படிகளை நினைக்குந்தரமன்று என்பதனையும் பெற வைக்கின்றாள். இவற்றால், முனைவன் மூவுலகாளி அப்பன் திருவருள் மூழ்கினளே' என்று இயற்கைப் புணர்ச்சி நடைபெற்றுவிட்டதை உறுதிப்படுத்துகின்றாள். மேற்கூறிய சான்றுகள் மட்டுமா? வேறு சான்றுகளும் உள்ளன என்கின்றாள். 'திருவருள் மூழ்கி வைகலும் செழுநீர்நிறக் கண்ணபிரான் திருவருள் களும்சேர்ந் தமைக்கடை யாளம் திருந்தஉள’** [வைகலும்-நர்ள்தோறும்.) 34. திருவாய், 8, 9, 5