பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்புலியூர் மாயப் பிரான் 153 இப் பெண்பிள்ளை பேசும் அழகுகளை என் சொல்வேன். இத்துடன் நின்றாளா? 'சீர்வ ளம்கிளர் மூவுல குண்டுமிழ் தேவபிரான் பேர்வ ளம்கிளர்ந் தன்றிப்பேச் இவன் 82 அத்தலத்து எம்பெருமானின் ஆபத்தில் தோழன் என்றி ருக்கும் திருக்குணத்தில் ஈடுபட்டு அவன் பிரளய காலத்தில் எல்லா உலகங்களையும் தன் திருவயிற்றில் வைத்துப் படைப்புக் காலத்தில் அவற்றை வெளிநாடு காண உமிழ்ந்த அற்புதச் செயலையும் பேசுகின்றாள். இவற்றையெல்லாம் சொல்லும்போது இவளுடைய வடிவு ஆபரணம் பூண்டாற் போன்று விளங்கும் அழகு சொல்லுந்தரமன்று' என்று குடுப்பிடுகின்றாள். இதனாலும் இத்தலத்து எம்பெரு மானுடன் கலவி நேர்ந்திருக்க வேண்டும்போல் தோன்று வதை ஊகிக்கவேண்டும் என்கின்றாள். இன்னும் இத்தலத்து எம்பெருமானுடன் புணர்ச்சி நடைபெற்றிருத்தல் கூடும் என்பதற்குச் சான்றுகளையும் காட்டத் தொடங்குகின்றாள் தோழி. 'புனையிழைகள் அணியும் ஆடையுடையும் புதுக்க கிைப்பும் நினையும் நீர்மைய தன்று இவட்கிது: நின்று நினைக்கப்புக்கால் சுனையினுள் தடந் தாமரை மலரும்தண் திருப்புலியூர் முனைவன் மூவுல காளிஅப்பன் திருவருள் மூழ்கினளே’’’’ 32. திருவாய், 8, 9: 4 33. டிை 8.9 :5