பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 மலைநாட்டுத் திருப்பதிகள் செல்வக் கண்ணன் தாள் அடைந்தாள் இம் மட வரலே'. மேலும், "படம் அரவு அணையான் தன் நாமம் அல்லால் பரவாள் இவளே’. அத்திருப்பதி எம்பெருமானின் திருநாமமே யன்றி வேறொரு பெயரையும் சொல்லுவதில்லை. அங்ஙனமே பரவாள் இவள் நின்று இராப்பகல்......திருப்புலியூர் புகழன்றி மற்றே'. 'திருப்புலி யூரின் புகழை வாய்விட்டுச் சொல்லுவது தவிர வேறொன்றும் அறியாள் இத்தலைவி என்கின்றாள். இதனாலும் இத்தலத்து எம்பிரானுடன் இவளுக்குக் கலவி நேர்ந்திருக்கவேண்டும் என்று குறிப்பிடுகின்றாள். இறுதியாக மே ற் கூறி ய காரணங்கட்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்தமாதிரி. இதற்கு வேறுவிதமான முடிவும் கூற முடியாதவாறு, பிறிதொரு காரணம் கூறுகின்றாள். 'அன்றிமற் றோருபாய மென்? இவள் அம்தண்து ழாய்க்கமழ்தல் நின்ற மாயப்பி ரான்திரு வருளாமிவள் நேர்பட்டதே.' (உபாயம்-காரணம்; கமழ்தல்-மணம் வீசுதல்.) இவளது உடம்பில் அழகிய குளிர்ந்த திருத்துழாயின் மணம் வீசுவதற்கு வேறு என்ன காரணம் இருக்க முடியும்? என் உடம்பிலாவது உங்கள் உடம்பிலாவது திருத்துழாயின் மணம் iசுகின்றதோ? எம்பெருமான்திருமேனியில்அணைந்தாலல்லது 36. திருவாய் 8, 9 : 7 37. டிெ ஐ. 9 : 8 38 டிெ 8, 9 9 39 டிெ 8.9 10